NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது

    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது

    எழுதியவர் Nivetha P
    Mar 04, 2023
    01:50 pm

    செய்தி முன்னோட்டம்

    ராமநாதபுர மாவட்டம் பரமக்குடியில் வசித்து வரும் 15 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பரமக்குடியில் வைகை நகரை சேர்ந்த சிகாமணி (44), இவர் பரமக்குடி நகராட்சி அதிமுக கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஆவார்.

    இவரும் இவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமது(36) என்பவரும் இந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை காரில் ஏற்றி அழைத்து சென்றுள்ளனர்.

    சிவகங்கை மாவட்ட மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு இந்த மாணவியை அழைத்து சென்ற இவர்கள் அங்கு வைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இவர்களோடு புது நகரை சேர்ந்த பிரபாகரனும்(42) இணைந்து கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    5 பேர் கைது

    போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

    மாணவியின் பெற்றோர் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்கள்.

    சிகாமணி நடத்தும் நிறுவனத்தில் பணியாற்றுபவர் கயல்விழி(45), இவர் இந்த மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்துவருகிறார்.

    தனது பள்ளிக்கு பணம் கட்டமுடியாமல் தனது பெற்றோர் கஷ்டப்படுவதாக கயல்விழியிடம் அந்த மாணவி கூறியுள்ளதாக தெரிகிறது.

    அதற்கு கயல்விழி தனது முதலாளியிடம் பணம் வாங்கி தருவதாக கூறி அந்த மாணவியை சிகாமணியிடம் கொண்டுவந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கயல்விழி மற்றும் அவருடன் பணியாற்றும் அன்னலட்சுமி என்னும் உமா(34) ஆகியோர் மீது இச்செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, சிகாமணி, பிரபாகரன் மற்றும் ராஜா முகமது ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் இவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராமநாதபுரம்
    தமிழ்நாடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு தமிழ்நாடு செய்தி

    தமிழ்நாடு

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ பள்ளி மாணவர்கள்
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் ஈரோடு

    மாவட்ட செய்திகள்

    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியோருக்கு 10 மடங்கு மின்கட்டணம் வசூல் - சென்னை உயர்நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம்
    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை கனமழை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025