NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம்
    சென்னையில் மட்டும் 2148 சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

    விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட பிறகு மெரினாவில் இருந்து 70 டன் கழிவுகள் அகற்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Sep 25, 2023
    05:08 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மெரினாவில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு பிறகு கடற்கரையில் ஒதுங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.

    இந்தியா முழுவதும் கடந்த 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியோடு பொது இடங்களில் விநாயகர் சிலையினை வைத்து வழிபட்டனர்.

    சென்னையில் மட்டும் 2148 சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தன.

    அதன் பிறகு அந்த சிலைகளை நேற்று சென்னை கடற்கரைகளில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டது.

    சென்னையிலுள்ள பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 4 கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    ட்ஜ்க்க்

     இரவோடு இரவாக குப்பைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்

    நேற்றும், அதற்கு முன்தினமும் பெரிய ஆரவாரத்துடன் கடற்கரைகளுக்கு விநாயகர் சிலைகளை எடுத்து சென்ற பக்தர்கள் அதை கடலில் கரைத்தனர்.

    அப்போது, பூஜை பொருட்கள், பூக்கள், பிரசாதங்கள், வாகனங்களில் இருந்த மரக்கட்டைகள் போன்றவையும் கடலில் வீசப்பட்டன.

    இதனையடுத்து, கடற்கரை முழுவதும் குப்பை கூளமாகியது. கடந்த இரண்டு நாட்களாக கடலுக்குள் வீசப்பட்ட பொருட்கள் கடலையும் குப்பை ஆக்கியது.

    இந்நிலையில், இதனால் அதிக கடல் மாசு ஏற்படக்கூடும் என்பதால், நேற்று இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் கிட்டத்தட்ட 70 டன் குப்பைகளையும் கழிவுகளையும் கடல் மற்றும் கடற்கரையில் இருந்து அகற்றினர்.

    மேலும், கடற்கரையில் ஒதுங்கிய விநாயகர் சிலைகளை மீண்டும் கடலில் கரைக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மெரினா

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    சென்னை

    சென்னையில் ஒரு சதுரடி நிலம் ரூ.1,000 ஆக நிர்ணயம் தமிழ்நாடு
    சென்னையில் ஆகஸ்ட் 27 முதல் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் பயணம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 26 தங்கம் வெள்ளி விலை
    சென்னை ஐஐடி-யில் துவங்கியுள்ள இளநிலை பட்டப்படிப்பு - சென்னை ஆட்சியரின் செய்திக்குறிப்பு ஐஐடி

    மெரினா

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைக்க அரசு முடிவு - அடுத்த மாதம் பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் தமிழக அரசு
    கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுதினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி  கலைஞர் கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025