NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன?
    'மஹாதேவ்' சூதாட்ட செயலி - லுக் அவுட் நோட்டீஸ் விடுத்த அமலாக்கத்துறை

    ஜூஸ் கடை முதல், 200 கோடி ரூபாய் சொத்து வரை: மஹாதேவ் சூதாட்ட செயலியின் பின்னணி என்ன?

    எழுதியவர் Nivetha P
    திருத்தியவர் Venkatalakshmi V
    Oct 06, 2023
    06:02 pm

    செய்தி முன்னோட்டம்

    இரு தினங்களாக வடமாநிலங்களில் தலைப்பு செய்தியாக வலம் வரும், 'மஹாதேவ்' சூதாட்ட செயலியின் பின்புலம் என்ன என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

    இந்தியாவின் வடமாநிலங்களில் 'மஹாதேவ்'ஆன்லைன் சூதாட்ட-செயலி மூலம் லட்சக்கணக்கானோர் தங்கள் பணத்தினை இழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானதும், இது குறித்த விசாரணையில் இறங்கியது அமலாக்கத்துறை.

    இந்த செயலியை நடத்தி வருவது, கருப்புப் பண சூழ்ச்சியாளர்களான சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் எனத்தெரிய வந்தது.

    தொடர்ந்து விசாரணை வளையத்தை நீடித்த அமலாக்கத்துறை மும்பை, கொல்கத்தா, போபால் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து, ரூ.417கோடி பறிமுதல் செய்தது.

    விசாரணை 

    பாலிவுட் நடிகர்களை விளம்பர தூதர்களாகிய சூதாட்ட செயலி 

    இதனிடையே இந்த ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்த பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகர் கபில் ஷர்மா, ஹினா கான் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்டோர் பணம் பெற்றதாக தகவல்கள் வெளியானது.

    இவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது அமலாக்கத்துறை.

    இந்த செயலியின் பின்புலத்தில் இருக்கும் 2 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் மற்றும் லுக்அவுட் சுற்றறிக்கையை பிறப்பித்துள்ளது.

    அப்போது தான், இந்தியாவே வியக்க ஆரம்பித்தது. யார் இந்த சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல்? எப்படி இவர்களை ரேடாருக்குள் கொண்டு வந்தது?

    கருப்புப் பண சூழ்ச்சியாளர்களான சௌரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் ஆன்லைன் சூதாட்ட உலகில் இரு பெரும் பெயர்கள்.

    card 3

    மஹாதேவ் செயலி மூலம் ஒருநாளைக்கு ரூ.200 கோடி வருமானம் ஈட்டிய நபர்கள்

    இவர்களது நெட்வொர்க் இந்தியாவில் மட்டுமின்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் உள்ளது.

    குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சத்தீஸ்கரின் பிலாயிலை பூர்வீகமாக கொண்டவர்கள்.

    ஆரம்ப காலத்தில் டையர் கடையும், ஜூஸ் கடையும் வைத்திருந்த இருவரும், தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்துக்கள் வைத்துள்ளனர்.

    இருவரும் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள்.

    ஒரு கட்டத்தில், தங்களிடம் இருந்த சேமிப்புடன், இருவரும் துபாய் சென்று, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவருடன் இணைந்து, இந்த மகாதேவ் ஆன்லைன் பந்தய செயலியை துவக்கியுள்ளனர்.

    இதன்மூலம், சூதாட்ட உலகில், தங்களுக்கென்று ஒரு 'பெயரை' உருவாக்கினர்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்காக, இந்தியாவில் சுமார் 4,000 பேனல் ஆபரேட்டர்கள், ஒவ்வொரு பேனல் ஆபரேட்டருக்கும் 200 வாடிக்கையாளர்கள் பந்தயம் கட்டுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

    card 4

    ஆடம்பர திருமணத்தால் சிக்கிய கும்பல்

    இந்த செயலியின் மூலம், இருவரும் தினமும் குறைந்தது ₹ 200 கோடி சம்பாதித்து , ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு 'பேரரசை' உருவாக்கயுள்ளனர்.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சௌரப் சந்திரகர் திருமணம் செய்துகொண்டபோது, ​​அந்த பிரமாண்டமான திருமண விழாவை ஏற்பாடு செய்வதற்காக ₹ 200 கோடி பணத்தை ரொக்கமாக செலவழித்ததாகக் கூறப்படுகிறது.

    அவர் தனது குடும்பத்தை, பிலாய் மற்றும் நாக்பூரிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கூட்டிவர, ஒரு தனியார் ஜெட் வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

    மேலும், 14 பாலிவுட் பிரபலங்களை திருமணத்திற்கு அழைத்துள்ளார். இவை அனைத்துமே, அமலாக்க துறையினர் வலையில் சிக்க காரணமாகியுள்ளது.

    இவர்கள் இருவரும் தற்போது வெளிநாடுகளில் பதுங்கியுள்ளதால், கைது செய்வதில் சட்ட சிக்கல்கள் எழுந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சம்மன்
    சத்தீஸ்கர்
    அமலாக்க இயக்குநரகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    அசாம்: குழந்தை திருமணம் செய்து கொண்ட 800 பேர் கைது  அசாம்
    ஆண்டுக்கு ரூ.9.6 லட்சம் சராசரி சம்பளம் பெறும் இந்தியர்கள் தமிழ்நாடு
    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் கிஷோர் - தேசிய கீதம் இசைத்ததும் கண்கலங்கினார் கிரிக்கெட்
    AG2023-5000மீ.,தடகள போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பருல் செளத்ரி  சீனா

    சம்மன்

    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  அதிமுக
    செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்

    சத்தீஸ்கர்

    2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு இந்தியா
    தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட  பாஜக  பாஜக

    அமலாக்க இயக்குநரகம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025