NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மீண்டும் மணிப்பூரில் வன்முறை: சாலை மறியல், டயர்கள் எரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மீண்டும் மணிப்பூரில் வன்முறை: சாலை மறியல், டயர்கள் எரிப்பு
    போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    மீண்டும் மணிப்பூரில் வன்முறை: சாலை மறியல், டயர்கள் எரிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jul 22, 2023
    10:40 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் தலைநகரான இம்பாலின் காரி பகுதியில் உள்ள ஒரு பிரதான சாலையை மறித்து பெண் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மீண்டும் அங்கு வன்முறைகள் பதிவாகியுள்ளன.

    போராட்டத்தின் போது டயர்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், வன்முறைகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதனையடுத்து, ஆயுதம் ஏந்திய போலீசார், ராணுவம் மற்றும் விரைவு நடவடிக்கை பட்டாலியன் ஆகிய படைகள் போராட்டக்காரர்களை ஒடுக்க சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அங்கு சென்ற படைகள் அதிரடி நடவடிக்கை எடுத்து, தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

    பிஜ்க்க்

    பல வன்முறை சம்பவங்கள் அம்மாநிலத்தில் நடந்து வருகிறது

    மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதமாக இனக்கலவரம் நடந்து வருகிறது.

    அங்கு நடந்த இன மோதல்களால் இதுவரை குறைந்தது 160 பேர் பலியாகியுள்ளனர்.

    மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்ப்பது தொடர்பான பிரச்சனையால் மணிப்பூரில் வன்முறை வெடித்தது.

    இதற்கு எதிராக 33 பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி 33 பழங்குடியின சமூகங்கள் சேர்ந்து, மெய்த்தே சமூகத்தை ST பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர். இந்த பேரணியை தொடர்ந்து வன்முறை வெடித்தது.

    தீ வைப்பு, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கொலை போன்ற பல சம்பவங்கள் கடந்த இரண்டு மாதங்களாக அம்மாநிலத்தில் நடந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    கலவரம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  கலவரம்

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025