NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத வழக்கறிஞர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத வழக்கறிஞர்
    உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத வழக்கறிஞர்

    முதல்முறையாக, உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத வழக்கறிஞர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 25, 2023
    06:46 pm

    செய்தி முன்னோட்டம்

    காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத வழக்கறிஞர் ஒருவர், சைகை மொழியைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்பாளர் மூலம் வாதாடிய வழக்கை உச்ச நீதிமன்றம் முதன்முறையாக விசாரித்தது.

    வழக்கறிஞர் சாரா சன்னி, தனது மொழிபெயர்ப்பாளர் திரு சௌத்ரி உடன் இணைந்து,இந்தியத் தலைமை நீதிபதி DY சந்திரசூட் முன் தனது வாதங்களை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதியை சமமாக அணுகுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்ற வளாகத்தினை மாற்றுத்திறனாளிகள் வசதிக்கேற்ப, மாற்றியமைக்குமாறு முன்னதாக கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தலைமை நீதிபதி சந்திரசூட் இரண்டு மாற்றுத்திறனாளி சிறுமிகளின் வளர்ப்புத் தந்தையும் ஆவார்.

    card 2

    தலைமை நீதிபதி சந்திரசூட்

    அதனாலோ என்னவோ, அவர் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை தருவதாக பல செய்திகள் வெளியாகின்றன.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில், தலைமை நீதிபதி சந்திரசூட் தனது இரண்டு மகள்களையும் தனது பணியிடத்திற்கு ஒரு மறக்கமுடியாத சுற்றுப்பயணத்திற்கு அழைத்து வந்தபோது உச்ச நீதிமன்றத்தில் இருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

    நீதிமன்றம் எவ்வாறு செயல்படுகிறது, அங்கு தன்னுடைய பணி என்ன என்பதை அவர் தனது மகள்களுக்கு விளக்கினார்.

    இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை, உச்ச நீதிமன்றமும் முதன்முறையாக சைகை மொழி பெயர்ப்பாளர்களை, அதன் இரண்டு நாள் தேசிய பங்குதாரர்கள் குழந்தை பாதுகாப்பு ஆலோசனையில் பயன்படுத்தியது. அதுமட்டுமின்றி, அந்தத் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள் பார்வையற்றோர் படிக்க உதவும் வகையில் முதன்முறையாக பிரெய்லியில் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    உச்ச நீதிமன்றம்

    அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ரா பதவி காலம் மீண்டும் நீட்டிப்பு - உச்சநீதிமன்றம்  மத்திய அரசு
    மணிப்பூர் வைரல் வீடியோ: உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்  மணிப்பூர்
    'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  மணிப்பூர்
    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம் மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025