NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி
    இந்தியா

    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி

    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி
    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023, 02:21 pm 1 நிமிட வாசிப்பு
    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி
    மதுரையில் மாடுகளை திருடிய ஹரியானாவை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது

    மதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு மாடுகள், பசுமாடுகள் முதலியன திருடுபோகும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த 11ம்தேதி இரவு எஸ்.எஸ்.காலனி, தாமஸ் காலனி பகுதியில் சரக்கு வேனில் மர்மகும்பல் மாடுகளை திருடிசெல்வதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தோர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்கள் தப்பிய நிலையில், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கூடல்புதூர் பகுதி வாகனசோதனை தீவிரப்படுத்தப்பட்டது. அவ்வழியாக வந்த வாகனத்தை சப்-இன்ஸ்பெக்டர் தவமணி இரும்பு தடுப்பை போட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அந்த வாகனம் தடுப்புகளை தள்ளிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது. இதில் அந்த இரும்பு தடுப்பு தவமணி இடதுகாலில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அவரை வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    ஹரியானாவை சேர்ந்த 5 பேர் கைது - மாடுகளை திருடி கேரளாவில் விற்ற திருட்டு கும்பல்

    இதனைதொடர்ந்து, இந்த மாடுதிருட்டு மர்மக்கும்பல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, செல்லூர் காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கூடல்புதூர் வாகனசோதனை சாவடியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து தாராபுரம் பகுதியில் பதுங்கியிருந்த ஹரியானவை சேர்ந்த 5பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் வீட்டுக்கு வெளியில் கட்டப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் சாலைகளில் திரியும் மாடுகளை கடத்தி கேரளாவில் விற்பனை செய்வது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மாடுகளை கடத்த உபயோகப்படுத்திய வாகனம், ரூ.11,140 பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மாடுதிருட்டு பின்னணியில் பலர் உள்ள நிலையில், அவர்களையும் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    காவல்துறை
    மதுரை

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    காவல்துறை

    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் கோவை
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை

    மதுரை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு கோவில் திருவிழாக்கள்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023