NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி
    மதுரையில் மாடுகளை திருடிய ஹரியானாவை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் கைது

    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி

    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023
    02:21 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் வீடுகளில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு மாடுகள், பசுமாடுகள் முதலியன திருடுபோகும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 11ம்தேதி இரவு எஸ்.எஸ்.காலனி, தாமஸ் காலனி பகுதியில் சரக்கு வேனில் மர்மகும்பல் மாடுகளை திருடிசெல்வதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தோர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் அவர்கள் தப்பிய நிலையில், காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து கூடல்புதூர் பகுதி வாகனசோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    அவ்வழியாக வந்த வாகனத்தை சப்-இன்ஸ்பெக்டர் தவமணி இரும்பு தடுப்பை போட்டு நிறுத்த முயன்றுள்ளார்.

    ஆனால் அந்த வாகனம் தடுப்புகளை தள்ளிக்கொண்டு வேகமாக சென்றுள்ளது.

    இதில் அந்த இரும்பு தடுப்பு தவமணி இடதுகாலில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார், அவரை வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    சிறையில் அடைப்பு

    ஹரியானாவை சேர்ந்த 5 பேர் கைது - மாடுகளை திருடி கேரளாவில் விற்ற திருட்டு கும்பல்

    இதனைதொடர்ந்து, இந்த மாடுதிருட்டு மர்மக்கும்பல் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, செல்லூர் காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    கூடல்புதூர் வாகனசோதனை சாவடியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதனையடுத்து தாராபுரம் பகுதியில் பதுங்கியிருந்த ஹரியானவை சேர்ந்த 5பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் வீட்டுக்கு வெளியில் கட்டப்பட்டிருந்த ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் சாலைகளில் திரியும் மாடுகளை கடத்தி கேரளாவில் விற்பனை செய்வது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து மாடுகளை கடத்த உபயோகப்படுத்திய வாகனம், ரூ.11,140 பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த மாடுதிருட்டு பின்னணியில் பலர் உள்ள நிலையில், அவர்களையும் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    காவல்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025