NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாட்டிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் கன்றினை ஈன்ற பசு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாட்டிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் கன்றினை ஈன்ற பசு 
    நாட்டிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் கன்றினை ஈன்ற பசு

    நாட்டிலேயே முதன்முறையாக வாடகை தாய் மூலம் கன்றினை ஈன்ற பசு 

    எழுதியவர் Nivetha P
    Jun 26, 2023
    06:56 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இதனிடையே, தற்போது திருப்பதி தேவஸ்தானம் தனது கோசாலையில் வளர்த்து வரும் நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் விதத்தில் பல ஏற்பாடுகளை மேற்கொண்டது.

    திருப்பதி ஏழுமலையானுக்கு நைவேத்திய பிரசாதம் தயார் செய்ய அவர்களுக்கு நாட்டு பசுக்களின் பால், தயிர், வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்கள் அன்றாடம் தேவைப்படுகிறது.

    இதற்கு அவர்களுக்கு 500 நாட்டு மாடுகள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது வெறும் 200 மாடுகள் தான் அவர்களிடம் கைவசமுள்ளது.

    இக்காரணத்தினால் அவர்கள் இம்முயற்சியில் மிகத்தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

    இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானம் அதிகளவுப்பாலினை கொடுக்கும் உயர்ரக நாட்டு பசுக்களை வாடகைத்தாய் முறையில் கலப்பு இனங்களாக உற்பத்தி செய்ய முடிவுச்செய்துள்ளது.

    நாட்டுமாடுகள் 

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 

    இதற்காக ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகத்துடன் கடந்தாண்டு திருப்பதி தேவஸ்தானம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதனையடுத்து, வடமாநிலங்களிலுள்ள உயர்ரக நாட்டுப்பசுக்களின் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டது.

    அந்த முட்டைகளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு கொண்டுச்சென்று, அவற்றை வேறு உயர்ந்த ரகத்தினை சேர்ந்த நாட்டுக்காளைகளின் விந்தணுக்கள் மூலம் கருத்தரிக்கச்செய்துள்ளனர்.

    அவ்வாறு உருவான கருக்களை இந்தியாவின் ஓங்கோல் போன்ற உயர்ரக நாட்டுமாடுகளின் கருப்பையில் செலுத்தி திருப்பதி தேவஸ்தானக்கோசாலையில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.

    இதுபோல் 10க்கும் மேற்பட்ட பசுக்கள் தற்போது திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கர்ப்பமாகவுள்ளது.

    அதன்படி இன்று(ஜூன்.,26)கோசாலையிலுள்ள ஓங்கோல் பசு ஒன்று, சாகிவால் என்னும் உயர்ரக இனத்தினைச்சார்ந்த கிடாரி கன்றினை ஈன்றுள்ளது.

    இந்தியாவிலேயே முதன்முறையாக வாடகைத்தாய் முறையில் பிறந்த இந்தக்கன்றுக்கு பத்மாவதி என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    மாநில அரசு
    திருப்பதி

    சமீபத்திய

    ஹார்வர்டின் இந்திய, வெளிநாட்டு மாணவர்கள் 3 நாட்களில் 6 நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் அங்கேயே தொடரலாம்! ஹார்வர்ட் பல்கலைக்கழகம்
    மஹிந்திரா BE 6 ரியர் வியூ கண்ணாடி விலை மட்டும் இவ்ளோவா? இதுக்கு ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கே வாங்கிடலாமே! மஹிந்திரா
    உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் கனிமொழி தலைமையிலான குழு பயணித்த விமானத்தை மாஸ்கோவில் தரையிறக்க முடியாமல் அவதி கனிமொழி
    அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மேல் விமானங்கள் பறக்க தடை விதித்து NOTAM அறிவிப்பு அந்தமான் நிக்கோபார்

    மத்திய அரசு

    புதிய பாராளுமன்றம் ஜனாதிபதி கொண்டு திறக்கப்படவேண்டும் - பொதுநல வழக்கு  பிரதமர் மோடி
    புதிய நாடாளுமன்ற வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா
    செந்தில் பாலாஜி உறவினர்கள் இடங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை  தமிழ்நாடு
    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! தமிழகம்

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025