NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகன் இறப்புக்கு காரணம் ஆனந்த் மஹிந்திரா; கான்பூரை சேர்ந்த தந்தை வழக்கு பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகன் இறப்புக்கு காரணம் ஆனந்த் மஹிந்திரா; கான்பூரை சேர்ந்த தந்தை வழக்கு பதிவு
    ஆனந்த் மஹிந்திரா மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் 12 பேர் மீது வழக்கு பதிவு

    மகன் இறப்புக்கு காரணம் ஆனந்த் மஹிந்திரா; கான்பூரை சேர்ந்த தந்தை வழக்கு பதிவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 26, 2023
    04:53 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரபிரதேசத்தின் கான்பூரில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் 12 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கான்பூரைச் சேர்ந்த ராஜேஷ் மிஸ்ரா என்பவர், நான்கு சக்கர வாகனத்தின் பாதுகாப்பு குறித்து தவறான உத்தரவாதம் அளித்ததால், தனது மகன் சாலை விபத்தில் இறந்து போனதாக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஜனவரி 14, 2022 அன்று ஒரு விபத்தில் தனது மகன் டாக்டர் அபூர்வ் மிஸ்ராவை இழந்த புகார்தாரர், சனிக்கிழமையன்று (செப்டம்பர் 23) உள்ளூர் நீதிமன்றம் மூலம் உத்தரவு பெற்று வழக்கு பதிவு செய்துள்ளார்.

    கான்பூரில் உள்ள ராய்பூர்வா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் டீலர்ஷிப் மேலாளர் ஆனந்த் கோபால் மஹிந்திராவும் இடம் பெற்றுள்ளார்.

    case registered against anand mahindra

    அபூர்வ் மிஸ்ரா இறப்பின் பின்னணி

    ராஜேஷ் மிஸ்ராவின் புகாரின்படி, அவர் டிசம்பர் 2, 2020 அன்று பிளாக் மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியை ரூ. 17.39 லட்சத்திற்கு வாங்கினார்.

    ஆனந்த் மஹிந்திராவின் சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் இடுகைகளைப் பார்த்த பிறகு, அதன் பாதுகாப்பு அம்சம் குறித்து நம்பியே இதை வாங்கியுள்ளார்.

    இந்த காரை அவர் தனது மகனுக்கு பரிசளித்த நிலையில், மகன் அபூர்வ், ஜனவரி 14, 2022 அன்று லக்னோவிலிருந்து கான்பூர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

    பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படாமல் இருந்திருந்தால், எஸ்யூவியை வாங்கியே இருந்திருக்க மாட்டேன் என மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராய்பூர்வா போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்து வழக்கை விசாரித்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆனந்த் மஹிந்திரா
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஆனந்த் மஹிந்திரா

    AI உருவாக்கிய ஆனந்த் மஹிந்திராவின் புகைப்படம்.. ட்வீட் செய்த ஆனந்த் மஹிந்திரா! செயற்கை நுண்ணறிவு
    பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசளிக்கும் ஆனந்த் மஹிந்திரா பிரக்ஞானந்தா

    உத்தரப்பிரதேசம்

    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காவல்துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை கேரளா
    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் நேபாளம்
    உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023ஐ பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025