NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர் 
    சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர்

    சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.2.30 கோடி செலவில் எஸ்கலேட்டர் 

    எழுதியவர் Nivetha P
    Jun 01, 2023
    06:38 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம் மாவட்டத்தின் மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், அதிநவீன ஈரடுக்கு பேருந்து நிலையமானது கட்டப்பட்டு வருகிறது.

    தமிழகத்தின் 5வதுபெரிய நகரமான சேலத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், பழைய பேருந்து நிலையத்தினை நவீனப்படுத்த முடிவு செய்யப்பட்டு ரூ.92 கோடியில் ஈரடுக்கு பேருந்து நிலையத்திற்கான பணிகள் கடந்த 2018ம்ஆண்டு முதல் நடந்துவருகிறது.

    தற்போது 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனிடையே திருவள்ளுவர் சிலையில் பழைய பேருந்துநிலையத்திற்கு வரும் பாதையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலத்தில் தார்சாலை, தடுப்புச்சுவர் போன்ற பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, ஈரடுக்கு பேருந்துநிலையத்தில் கீழ் தளத்தில் டூவீலர் பார்க்கிங் மற்றும் கடைகளும், மேல்தளத்தில் பேருந்துகள், நவீன வசதிக்கொண்ட உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது.

    பேருந்து நிலையம் 

    430 பேருந்துகள் வந்துசெல்லும் வகையில் கட்டமைப்பு

    இந்நிலையில் தற்போது இந்த ஈரடுக்கு பேருந்துநிலையத்தில் கீழேயிருந்து மேலே செல்ல இரண்டு இடங்களில் படிக்கெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    எனினும், இங்கு எஸ்கலேட்டர் என்னும் தானியங்கி படிக்கெட்டுகள் அமைக்க பலத்தரப்புகள் கோரிக்கை வைத்த நிலையில், மாநில அரசு தற்போது அதற்கான ஒப்புதலை அளித்துள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இங்கு 430பேருந்துகள் வந்துசெல்லும் வகையில் கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    11,500 சதுர.மீ.,தரைத்தளம் கொண்டு, 4,586சதுர.மீ.,வணிக உபயோகத்துக்காக ஒதுக்கப்பட்டு 54கடைகள் அமைக்கப்படவுள்ளது.

    1,181வாகனங்கள் நிற்கும் வகையில் கார்பார்க்கிங், ரயில்நிலையத்தில் போல் வைபை சேவை, ஏசி, பயணிகள் தங்கும் அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது.

    இதையடுத்து 2 கோடியே 30லட்சம் செலவில் எஸ்கலேட்டர் அமைக்கப்படவுள்ளது.

    இது 7மீ., உயரத்தில் இறங்கவும், ஏறவும் அமைக்கப்படவுள்ளது.

    இதற்கான டெண்டர் விரைவில் துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேலம்
    தமிழ்நாடு
    மாநில அரசு

    சமீபத்திய

    10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் மாவோயிஸ்ட்
    16 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை; 8 நாட்கள் முன்கூட்டியே கேரளாவில் பருவமழை தொடங்கியது! பருவமழை
    எளிமையான KYC விதிகளை முன்மொழிந்துள்ள RBI: சிறு சிறு மாற்றங்களுக்கு எல்லாம் இனி ஆவணங்களை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை ரிசர்வ் வங்கி
    ஆப்பிள் நிறுவனத்திற்கு வரி அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து, சாம்சங்கை குறிவைக்கும் டிரம்ப் சாம்சங்

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    தமிழ்நாடு

    மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறை சோதனை  தமிழ்நாடு செய்தி
    பொறியியல் கல்லூரிகளில் தமிழ் வழிப் பாடப்பிரிவுகள் மூடப்படாது: அமைச்சர் பொன்முடி தமிழக அரசு
    தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு!  பள்ளி மாணவர்கள்
    என் வீட்டில் சோதனை நடைபெறவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி   திமுக

    மாநில அரசு

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025