NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு

    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு

    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023
    07:03 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம்தேதி நடைபெறவுள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி மற்றும் ஈ.பி.எஸ். அணி என இருவரும் இரு அணிகளாக பிரிந்து தனித்தனி வேட்பாளர்களை அறிவித்துள்ளார்கள்.

    எனவே, அதிமுக'வின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பேச்சுக்கள் வலம் வந்தன.

    இந்நிலையில் இதுகுறித்து ஈ.பி.எஸ். தரப்பில் அளிக்கப்பட்ட இடையீட்டு மனுகுறித்த விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீதான வாதங்கள் நடந்தது.

    தொடர்ந்து, இந்த விவகாரத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு ஒன்றினை அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான ஓ.பி.எஸ். தரப்பினரையும் உள்ளடக்கிய பொதுக்குழு நடத்தப்பட்டு, அந்த முடிவின்படி தீர்மானிக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    தெளிவுபடுத்திய நீதிபதிகள்

    இடைக்கால உத்தரவு இந்த இடைத்தேர்தலுக்கு மட்டுமே - உச்சநீதிமன்றம்

    மேலும் இந்த உத்தரவு இந்த இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

    பொதுக்குழு நடத்தப்பட்டு வாக்கு அடிப்படையில் அதிமுக வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    அவ்வாறு தேர்தெடுக்கப்படும் வேட்பாளர் தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்மகன் உசேன் அனுப்ப வேண்டும், அதனை தேர்தல் ஆணையம் ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த இடைக்கால ஏற்பாடு என்பது பிரதான வழக்கில் எந்த வகையிலும் தோதாக கருத முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.

    முன்னதாக, இரு அணிகளாக பிரிந்து இருக்கும் அ.தி.மு.க.'வில், ஈ.பி.எஸ். தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு போட்டியிடப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அதிகாரபூர்வமாக ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் ஆணையம்
    உச்ச நீதிமன்றம்
    தேர்தல்

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025