NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம்
    இந்தியா

    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம்

    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம்
    எழுதியவர் Nivetha P
    Feb 24, 2023, 01:37 pm 1 நிமிட வாசிப்பு
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம்
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், திமுக-அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே பெரும் போட்டி நடந்து வருகிறது. அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அப்பகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பண பட்டுவாடா செய்வதாகவும், பரிசு பொருட்களை வழங்குவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அப்பகுதி மக்களுக்கு பிரச்சாரம் ஓர் தொழிலாகவே மாறிவிட்டது. ஏனெனில் பிரச்சாரத்திற்கு சென்றால் 500-1000 ரூபாய் வரை கொடுப்பதோடு பிரியாணியும் வாங்கித்தரப்படுகிறது என்று கூறப்படுகிறது. இது மட்டுமில்லாமல் அப்பகுதி மக்களுக்கு குக்கர், வேஷ்டி, பட்டு சேலை, வெள்ளி கொலுசு போன்ற விதவிதமான பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    ஃபயர் போல்ட் என்னும் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டுள்ளது

    இந்நிலையில் நேற்று திமுக கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. ஃபயர் போல்ட் என்னும் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டுள்ளது. வாட்ச் இருந்த பாக்சில் அதன் விலை 7,999 என்று இருப்பதை கவனித்த வாக்காளர்கள் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் 35 வயதிற்குட்பட்டோருக்கு இந்த ஸ்மார்ட் வாட்ச்'ஆனது ஆண்கள் பெண்கள் என அவரவருக்கு ஏற்றார் போல் கொடுக்கப்பட்டுள்ளது. 35 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஆண்களுக்கு சோனாட்டா நிறுவன லெதர் வாட்ச் மற்றும் பெண்களுக்கு தங்கநிற செயின் வைத்த வாட்ச் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல பரிசுகள் கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதி மிகுந்த பரபரப்பான பகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    தேர்தல்
    ஈரோடு

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஓ.பன்னீர் செல்வம்
    தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான மாணவர் சேர்க்கை - ஆர்டிஈ பள்ளி மாணவர்கள்
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்

    தேர்தல்

    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு கொலுசு, குக்கர் போன்ற பரிசு பொருட்கள் வழங்குவதாக புகார் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வெறும் 315 ருபாய் செலவாகியுள்ளதாக சுயேட்சை வேட்பாளர் அறிக்கை ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் உறுதி ஈரோடு

    ஈரோடு

    அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் தமிழ்நாடு
    ஈரோடு இடைத்தேர்தல் - அனுமதியில்லாமல் திறந்த 14 அதிமுக, திமுக அலுவலகங்களுக்கு சீல் தேர்தல் ஆணையம்
    ஈரோடு இடைத்தேர்தல் - 19ம் தேதி முதல் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் தமிழ்நாடு
    ஈரோடு இடைத்தேர்தல்-டி.சி.கிருஷ்ணனுன்னி முன்னிலையில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்கள் பறிமுதல் தேர்தல்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023