NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீயில் சேதமடைந்த EVMகள்; மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீயில் சேதமடைந்த EVMகள்; மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு 
    பெதுலில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

    தீயில் சேதமடைந்த EVMகள்; மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 09, 2024
    02:09 pm

    செய்தி முன்னோட்டம்

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பழுதடைந்ததால், மத்தியப் பிரதேச மாநிலம் பெதுலில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    செவ்வாய்க்கிழமை இரவு, வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றிச் சென்ற பேருந்து, தீப்பிடித்ததில் EVMகள் சேதமடைந்தன.

    அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் இருந்த 36 நபர்களும் எந்த காயமும் இன்றி பாதுகாப்பாக வெளியேற முடிந்தது என உள்ளூர் காவல்துறையால் உறுதிப்படுத்தியது.

    இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத் தொகுதியின் முல்டாய் சட்டமன்றப் பிரிவுக்குள்பட்ட சிக்லிமால், துடர் ராயத், குந்தா ராயத், மற்றும் ராஜாபூர் ஆகிய 4 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    தீ விபத்து குறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    சம்பவ அறிக்கை

    தீ விவரங்கள் மற்றும் தேர்தல் கண்ணோட்டம்

    தேர்தல் பணி முடிந்து பேருந்து திரும்பிக் கொண்டிருந்த போது கவுலா கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

    காவல்துறை கண்காணிப்பாளர் ஜாரியாவின் கூற்றுப்படி , இயந்திரக் கோளாறே தீ விபத்துக்குக் காரணம் எனக்கண்டறியப்பட்டுள்ளது.

    நான்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிறிய சேதத்தை சந்தித்தன, மற்ற இரண்டு அப்படியே இருந்தன.

    கதவுகள் அடைக்கப்பட்டதால், ஊழியர்கள் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக்கொண்டு தப்பினர்.

    நாடாளுமன்றத் தொகுதியின் முல்டாய் சட்டமன்றப் பிரிவுக்குட்பட்ட இந்தச் சாவடிகளில், மே 10-ஆம் தேதி காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மாற்றியமைக்கப்பட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மறு வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக என்றும் பெதுல் ஆட்சியர், நரேந்திர சூர்யவன்ஷி உறுதிப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல் ஆணையம்
    தேர்தல்
    வாக்கு
    வாக்கு சாவடி

    சமீபத்திய

    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025

    தேர்தல் ஆணையம்

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் கமிஷனர் அருண் கோயல் ராஜினாமா  மக்களவை
    தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்த விவகாரம்: மத்திய அரசை கடுமையாக விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்  மத்திய அரசு
    மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு  தேர்தல்
    தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு இந்தியா

    தேர்தல்

    சாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை கொண்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு காங்கிரஸ்
    AI தொழில்நுட்பத்தின் மூலம் அமெரிக்க, இந்திய தேர்தல்களை சீர்குலைக்க சீனா திட்டம்: மைக்ரோசாப்ட் செயற்கை நுண்ணறிவு
    நெல்லை வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பாஜக முயற்சி? பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பா? பாஜக
    கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம் கனடா

    வாக்கு

    வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? இருந்தாலும் கூட வாக்களிக்கலாம்! வாக்காளர்
    தேர்தல் 2024: நாட்டின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு துவங்குகிறது தேர்தல்
    கோவையில் ரூ.1,000 கோடி செலவு செய்த எதிர்க்கட்சிகள்: அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு அண்ணாமலை
    நாடாளுமன்ற தேர்தல் 2024: ஜனநாயக கடமையாற்றிய கோலிவுட் பிரபலங்கள் தேர்தல்

    வாக்கு சாவடி

    சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'! சென்னை
    மணிப்பூர்: வன்முறைக்குப் பிறகு 11 சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது மணிப்பூர்
    தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு சதவீதத்தில் ஏன் இத்தனை குளறுபடி? சத்யபிரதா சாகு விளக்கம்! தமிழ்நாடு
    கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் தேர்தல் 2024 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025