Page Loader
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது
இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2025
08:24 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது. 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 18 வரை, வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புகைப்பட அடையாள அட்டைகளில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் மற்றும் தரமான புகைப்படங்களை இணைத்தல் போன்ற பணிகள் இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் செய்யப்பட்டன. அக்டோபர் 29ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது, அதன்பிறகு, நவம்பர் 28ஆம் தேதி வரை சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின்னர் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

முகாம்கள் 

சிறப்பு முகாம்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள்

மாநில தேர்தல் ஆணையம் சார்பாக தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. கிட்டத்தட்ட 69,000 வாக்கு சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதுமட்டுமின்றி வட்டார தாலுகா அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதன் அடிப்படையில், 23.09 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இன்று வெளியிடப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடபடும்.