NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது
    "தேநீருக்கு இரட்டை குவளை கூடாதெனில்; குடிநீருக்கு இரட்டை தொட்டி கூடாது." தொல்.திருமாவளவன்

    மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது

    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    புதுக்கோட்டை வேங்கைவயலில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சாலை மறியல் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை(DYFI) போலீஸார் கைது செய்துள்ளனர்.

    புதுக்கோட்டை இறை யூர் ஊராட்சியை சேர்ந்த வேங்கைவயல் என்ற பகுதியில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தெரியவந்தது.

    இதற்காக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏடிஎஸ்பியின் தலைமையில் 11 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது.

    ஆனால், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னும் குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    வேங்கைவயல்

    சாலை மறியலாக மாறிய ஆர்ப்பாட்டம்

    மேலும், வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்காக ரூ.7 லட்சம் செலவில் புதிய குடிநீர் தொட்டியின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

    இதற்கு, "ஆதிதிராவிட சமூகத்தினருக்கு தனிக் குடிநீர் தொட்டி அமைக்கக்கூடாது. தேநீருக்கு இரட்டை குவளை கூடாதெனில்; குடிநீருக்கு இரட்டை தொட்டி கூடாது." என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் கூறி இருந்தார்.

    இந்நிலையில், மனித கழிவுகள் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தின்போது சத்தியமங்கலம் பகுதியை தாண்டி சென்ற சங்கத்தினரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.

    போலீஸாரின் இந்த செயலை கண்டித்தும் தொட்டியை இடிக்க கோரியும் DYFI சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாகும் 25 வயது தலித் பெண்மணி இந்தியா
    ஜனவரி 19க்கான Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; தொழில்நுட்பம்
    10 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய மைக்ரோசாப்ட் - சத்யா நாடெல்லா உருக்கமான கடிதம்! தொழில்நுட்பம்
    ஆடம்பர வாழ்ககையை துறந்து துறவியான வைர வியாபாரியின் மகள் குஜராத்

    தமிழ்நாடு

    ஆளுநரின் வெளிநடப்பை கடுமையாக கண்டிக்கும் அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு செய்தி
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை பொங்கல் திருநாள்
    திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பொங்கல் கருணைத்தொகையும் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025