NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது
    இந்தியா

    மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது

    மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது
    எழுதியவர் Sindhuja SM
    Jan 21, 2023, 06:11 pm 1 நிமிட வாசிப்பு
    மனித கழிவுகள் கலக்கப்பட்ட தொட்டியை இடிக்க கோரிய DYFI சங்கத்தினர் கைது
    "தேநீருக்கு இரட்டை குவளை கூடாதெனில்; குடிநீருக்கு இரட்டை தொட்டி கூடாது." தொல்.திருமாவளவன்

    புதுக்கோட்டை வேங்கைவயலில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சாலை மறியல் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை(DYFI) போலீஸார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை இறை யூர் ஊராட்சியை சேர்ந்த வேங்கைவயல் என்ற பகுதியில் பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தெரியவந்தது. இதற்காக வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஏடிஎஸ்பியின் தலைமையில் 11 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னும் குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்படாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

    சாலை மறியலாக மாறிய ஆர்ப்பாட்டம்

    மேலும், வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்காக ரூ.7 லட்சம் செலவில் புதிய குடிநீர் தொட்டியின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு, "ஆதிதிராவிட சமூகத்தினருக்கு தனிக் குடிநீர் தொட்டி அமைக்கக்கூடாது. தேநீருக்கு இரட்டை குவளை கூடாதெனில்; குடிநீருக்கு இரட்டை தொட்டி கூடாது." என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் கூறி இருந்தார். இந்நிலையில், மனித கழிவுகள் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க கோரி ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது சத்தியமங்கலம் பகுதியை தாண்டி சென்ற சங்கத்தினரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். போலீஸாரின் இந்த செயலை கண்டித்தும் தொட்டியை இடிக்க கோரியும் DYFI சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : தங்கம் வென்றார் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் இந்திய அணி
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அவசர ஆலோசனை இந்தியா

    தமிழ்நாடு

    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    கோவை பள்ளியில் நடந்த போக்ஸோ விழிப்புணர்வு நிகழ்ச்சி - பாலியல் வன்கொடுமை குறித்து கூறிய 12 வயது சிறுமி இந்தியா
    வானிலை அறிக்கை: மார்ச் 22- மார்ச் 26 புதுச்சேரி
    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது மு.க ஸ்டாலின்

    இந்தியா

    அதிக விமான நிலையங்களை ஏலம் எடுக்க இருக்கும் அதானி குழுமம் வணிக செய்தி
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நிது கங்காஸ் இந்திய அணி
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    மெட்டாவில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட இந்தியரின் உருக்கம்! மெட்டா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023