NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்
    NCB வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.

    இந்தியப் பெருங்கடலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2023
    03:48 pm

    செய்தி முன்னோட்டம்

    சனிக்கிழமை அன்று இந்திய கடல் பகுதியில் ரூ.25,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம்(NCB) மற்றும் இந்தியக் கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனையில் இந்த போதை பொருட்கள் சிக்கியது.

    இந்திய கடற்படையால் கைப்பற்றப்பட்ட உயர் தூய்மை மெத்தாம்பேட்டமைன் 2,525 கிலோ இடை கொண்டது. மேலும், இதன் மதிப்பு ரூ.25,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    NCB வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலில் இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.

    23 மணி நேரத்திற்குள் இவை கணக்கிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    "உயர் ரக மெத்தாம்பெட்டமைன் என்பதால் இதற்கு மதிப்பு அதிகம். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 134 சாக்குகளில் இருந்தது. மெத்தாம்பெட்டமைன் தலா ஒரு கிலோ பாக்கெட்டுகளாக வைக்கப்பட்டிருந்தன" என்று அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    details

    இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தியாவில் விற்பதற்காக கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்

    இது தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என NCB அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சனிக்கிழமையன்று, ஒரு சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட NCB, இந்திய கடல் பகுதியில் சுமார் 2,500 கிலோ போதைப்பொருட்களை கைப்பற்றியது.

    இதுவரை கைப்பற்றப்பட்ட போதை பொருட்களிலேயே இதற்கு தான் மதிப்பு அதிகம் என்று துணை இயக்குநர் ஜெனரல்(Ops) சஞ்சய் குமார் சிங் கூறினார்.

    "NCB மற்றும் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் ஒரு வெற்றிகரமான நடவடிக்கையை நடத்தியது. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து வந்தவைகளாகும். இந்த சரக்கு இலங்கை, மாலத்தீவு மற்றும் இந்தியாவிற்காக கடத்தப்பட்டிருக்கிறது." என்று சிங் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கடற்படை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    கர்நாடக தேர்தல் இறுதி கருத்துக்கணிப்புகளின் முழு விவரம்: பாகம் 2 கர்நாடகா
    உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்ற இந்தியாவின் ரிதம் சங்வான் உலக கோப்பை
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே 3வது முறையாக குண்டுவெடிப்பு பஞ்சாப்
    மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் பதவி பறிபோகுமா: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு  மகாராஷ்டிரா

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025