NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி
    சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம்

    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி

    எழுதியவர் Nivetha P
    Dec 25, 2022
    09:37 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரனின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

    இதனையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக'வின் தற்போதைய பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட பல அரசியல் சார்ந்தோர் இன்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

    இதனால் அவரது நினைவிடத்தில் இன்று வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து, காலை 10 மணியளவில் பழனிச்சாமியுடன் அவரது ஆதரவாளர்களும், 11 மணிக்கு ஓபிஎஸ் அவர்களும், 12 மணிக்கு சசிகலா தரப்பினரும், 12.30 மணியளவில் டிடிவி தினகரன் தரப்பினரும் அஞ்சலி செலுத்தவுள்ளதாக தெரிகிறது.

    பலத்த போலீஸ் பாதுகாப்பு

    மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.

    இவர்களுக்குள் மோதல் ஏற்படுவதை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.

    அண்ணாவின் மறைவிற்கு பிறகு கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அதன் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனியாக கட்சி துவங்கி, மக்கள் மனதில் இடம்பிடித்து, தமிழக முதல்வராக பதவியேற்று, பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார்.

    1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்த இவர் இன்றும் மக்கள் மனதில் பெரும் அரசியல் தலைவர்களுள் ஒருவராக வாழ்ந்து வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    அரசியல் நிகழ்வு
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    தமிழ்நாடு

    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! இந்தியா
    அமைச்சராகப் பதவியேற்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்
    தமிழ்த் திரையுலகில் 20 வருடங்களாக ஆதிக்ககம் செலுத்தி வரும் த்ரிஷா த்ரிஷா
    1000 விளக்குகளால் உருவான ஸ்ரீரங்கம் கோயிலின் ராஜகோபுரம் இந்தியா

    அரசியல் நிகழ்வு

    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! தமிழ்நாடு

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025