NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவிட் காலத்தில் இந்தியா வழங்கிய உதவிக்கு நன்றி கூறி பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவிட் காலத்தில் இந்தியா வழங்கிய உதவிக்கு நன்றி கூறி பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது
    பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது

    கோவிட் காலத்தில் இந்தியா வழங்கிய உதவிக்கு நன்றி கூறி பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 14, 2024
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    காமன்வெல்த் ஆஃப் டொமினிகா, தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    COVID-19 தொற்றின்போது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியா, டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது.

    அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு உதவிகளை அளித்திருந்தது.

    இந்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், டொமினிகா தனது நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    அறிக்கை

    டொமினிக்காவின் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

    இது தொடர்பாக, டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி, டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது, சரியான நேரத்தில் அவர் நமக்கு உதவி செய்தார். இதுவரையிலான அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும், நாங்கள் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க இருக்கின்றோம்" என்றார்.

    மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும், நவம்பர் 19 முதல் 21 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெறும் இந்தியா-காரிகாம் உச்சிமாநாட்டின் போது காமன்வெல்த் தலைவர் டொமினிகா சில்வானி பர்ட்டன், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    விருது

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    பிரதமர் மோடி

    இரு தினங்களில் பிரதமர் மோடியை சந்திக்கவிருக்கிறாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்? மு.க.ஸ்டாலின்
    வரி விதிப்பில் இந்தியா 'துஷ்பிரயோகம் செய்கிறது' என்றும், மோடியை 'அற்புதமான மனிதர்' என்றும் கூறிய டிரம்ப்  டொனால்ட் டிரம்ப்
    #PMMomentos: ஏலத்தில் விடப்படும் பிரதமர் மோடியின் நினைவு பரிசுகள் பிரதமர்
    செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி; ஐநா பொதுச் சபையில் உரையாற்றுகிறார் அமெரிக்கா

    விருது

    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025