Page Loader
கோவிட் காலத்தில் இந்தியா வழங்கிய உதவிக்கு நன்றி கூறி பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது
பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது

கோவிட் காலத்தில் இந்தியா வழங்கிய உதவிக்கு நன்றி கூறி பிரதமர் மோடிக்கு டொமினிகாவின் உயரிய தேசிய விருது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 14, 2024
04:50 pm

செய்தி முன்னோட்டம்

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா, தனது உயரிய தேசிய விருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. COVID-19 தொற்றின்போது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியா, டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது. அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு உதவிகளை அளித்திருந்தது. இந்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், டொமினிகா தனது நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அறிக்கை

டொமினிக்காவின் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

இது தொடர்பாக, டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் வெளியிட்ட அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடி, டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது, சரியான நேரத்தில் அவர் நமக்கு உதவி செய்தார். இதுவரையிலான அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும், நாங்கள் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க இருக்கின்றோம்" என்றார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும், நவம்பர் 19 முதல் 21 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெறும் இந்தியா-காரிகாம் உச்சிமாநாட்டின் போது காமன்வெல்த் தலைவர் டொமினிகா சில்வானி பர்ட்டன், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.