NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 500 ரூபாய் நோட்டையும் திரும்பப் பெறும் திட்டத்தைக் கொண்டிருக்கிறதா மத்திய அரசு?
    அடுத்த செய்திக் கட்டுரை
    500 ரூபாய் நோட்டையும் திரும்பப் பெறும் திட்டத்தைக் கொண்டிருக்கிறதா மத்திய அரசு?
    500 ரூபாய் நோட்டையும் திரும்பப் பெறும் திட்டத்தைக் கொண்டிருக்கிறதா மத்திய அரசு?

    500 ரூபாய் நோட்டையும் திரும்பப் பெறும் திட்டத்தைக் கொண்டிருக்கிறதா மத்திய அரசு?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jul 25, 2023
    03:34 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் கடந்த மே மாதம், மக்களி புழக்கத்தில் இருந்து 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்தது ரிசர்வ் வங்கி. 2000 ரூபாய் நோட்டை வைத்திருப்பவர்கள் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் அதனை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்கு அடுத்தபடியாக இருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா என 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து வடிவில் கேள்வியெழுப்பியிருக்கின்றனர்.

    இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சகத்தின் துணை அமைச்சராக செயல்பட்டு வரும் பங்கஜ் சௌத்ரி, இதற்கும் மேல் வேறு ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்யும் அல்லது திருப்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை, எனத் தெரிவித்திருக்கிறார்.

    இந்தியா

    1000 ரூபாய் நோட்டுக்கள் மீண்டும் புழக்கத்திற்கு வருமா? 

    மேலும், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் கால அவகாசமும் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் நாடளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, பெருகும் பணத் தேவையை சமாளிக்க 1000 ரூபாய் நோட்டுக்களை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டு வரும் திட்டம் இருக்கிறதா என்றும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    இந்தக் கேள்விக்கு பதிலளித்த பங்கஜ் சௌத்ரி, 2000 ரூபாய் நோட்டுகளால் ஏற்படும் பணத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும், தேவையான அளவு பிற ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிகளுக்கும் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ரிசர்வ் வங்கி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    தேர்தலின் போது தூர்தர்ஷனில் விளம்பரம் செய்ய டிஜிட்டல் வவுச்சர்கள் அறிமுகம் தேர்தல் ஆணையம்
    அமெரிக்காவின் பென்டகனை பின்தள்ளிய சூரத்தைச் சேர்ந்த வைர வர்த்தக மையக் கட்டிடம் குஜராத்
    சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டைக் கொண்ட நாடுகள் பட்டியலில் 80வது இடத்தைப் பிடித்த இந்தியா உலகம்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூலை 19 தங்கம் வெள்ளி விலை

    ரிசர்வ் வங்கி

    அதானி பங்குகள் வீழ்ச்சி; வங்கித் துறை நிலையாக தான் உள்ளது: RBI இந்தியா
    அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இந்தியா
    ரெப்போ வட்டி விகிதம் உயர்வு: சமானிய மக்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் என்ன? தொழில்நுட்பம்
    ரூபாய் நோட்டில் கிறுக்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்று கூறப்படுவது உண்மையா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025