NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!
    இந்தியா

    பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!

    பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!
    எழுதியவர் Sindhuja SM
    Jan 04, 2023, 11:49 am 0 நிமிட வாசிப்பு
    பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!
    திமுக இளைஞரணி நிர்வாகிகளாக இருந்த ஏகாம்பரம் மற்றும் பிரவீன்

    பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொது கூட்டத்திற்கு சென்றிருந்தனர். இவர்கள் இருவரும் அங்கிருந்த பெண் காவலர் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, அந்த பெண் காவலர் காவல்துறையில் புகார் அளித்தார்.

    விசாரணை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

    இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர். பின், சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு கீழ் ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும் கட்சியின் விதிகளை மீறியதாலும் இவர்கள் இருவரும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இதை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    மீண்டும் அணிக்கு திரும்பும் முன்னாள் கேப்டன் முகமது நபி : ஆப்கான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு டி20 கிரிக்கெட்
    விமானப்படையில் அக்னி வீரராக சேர விருப்பமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என அறிவிப்பு விமானப்படை
    பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 8ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
    மகளிர் ஐபிஎல் 2023 : ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றி! புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம்! மகளிர் ஐபிஎல்

    தமிழ்நாடு

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    தமிழக வேளாண் பட்ஜெட்'டினை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பட்ஜெட் 2023
    வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25 புதுச்சேரி
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் கொள்ளையடித்த கில்லாடி பெண்; போலீஸார் கைது வைரல் செய்தி

    திமுக

    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் தமிழ்நாடு செய்தி
    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு
    புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் கொடுத்த எம்.எல்.ஏ. புதுச்சேரி
    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023