NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!
    திமுக இளைஞரணி நிர்வாகிகளாக இருந்த ஏகாம்பரம் மற்றும் பிரவீன்

    பெண் காவலரிடம் சில்மிஷம் செய்த திமுக இளைஞரணியினர் கைது!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 04, 2023
    11:49 am

    செய்தி முன்னோட்டம்

    பெண் காவலரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதற்காக திமுக இளைஞரணியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திமுக இளைஞரணி நிர்வாகிகளான ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி இரவு சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பொது கூட்டத்திற்கு சென்றிருந்தனர்.

    இவர்கள் இருவரும் அங்கிருந்த பெண் காவலர் ஒருவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது குறித்து, அந்த பெண் காவலர் காவல்துறையில் புகார் அளித்தார்.

    நடவடிக்கை

    விசாரணை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

    இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்தனர்.

    பின், சாட்சிகளிடமும் விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் முடிவில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு கீழ் ஏகாம்பரம், பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திமுக கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்டதாலும் கட்சியின் விதிகளை மீறியதாலும் இவர்கள் இருவரும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

    இதை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    திமுக

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! கமல்ஹாசன்
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்

    தமிழ்நாடு

    70% இடஒதுக்கீட்டு பணியிடங்களை நிரப்பாத மத்திய கல்வி நிறுவனங்கள்! அரசியல் நிகழ்வு
    திருவாரூரில் நெடுஞ்சாலையோரத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்-ஒரு லட்ச ரூபாய் அபராதம் வைரல் செய்தி
    ராமர் பாலம் இருந்ததாக திட்டவட்டமாக கூற முடியாது - இஸ்ரோ செயற்கைக்கோள் ஆய்வின் மூலம் தகவல் இந்தியா
    ஜனவரி 10ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்-மின் தடை ஏற்படும் அபாயம்? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025