NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி
    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

    சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல நாளை முதல் 4 நாட்களுக்கு அனுமதி

    எழுதியவர் Nivetha P
    May 31, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகிலுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோயில்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் இங்கு வந்து வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, வைகாசி மாத பவுர்ணமி மற்றும் பிரதோஷம் வரவிருப்பதையடுத்து சதுரகிரி மலைக்கு பக்தர்கள் சென்று சாமியினை தரிசிக்க வரும் ஜூன் 1ம்தேதி(நாளை)முதல் ஜூன் 4ம்தேதி வரை 4 நாட்களுக்கு வனத்துறை மற்றும் அந்த கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    குறிப்பிட்ட இந்த 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற முடியும் என்று காலக்கெடுவும் வகுக்கப்பட்டுள்ளது.

    தடை 

    பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு விதிப்பு 

    சதுரகிரி மலையேறும் பக்தர்கள் இடையில் வரும் நீரோடை பகுதிகளில் இறங்கி குளிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    அதே போல் இரவில் பக்தர்கள் மலைமீது தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச்செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

    அதேபோல் அனுமதி வழங்கப்பட்ட இந்த 4 நாட்களில் பலத்த மழை அல்லது அங்குள்ள நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டால் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியானது ரத்து செய்யப்படும் என்றும் வனத்துறையினர் மற்றும் கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

    மேலும் அடுத்த 4 நாட்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரக்கூடும் என்பதால் அவர்களுக்கான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருதுநகர்
    வனத்துறை

    சமீபத்திய

    தனது 65வது பிறந்தநாளில் 'முகரகம்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார் மோகன்லால் மோகன்லால்
    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் மாவட்ட செய்திகள்
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது தமிழ்நாடு
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு

    வனத்துறை

    அரிக்கொம்பன் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம் நிவாரணம்!  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025