NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி /  டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை 
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை 
    இந்தியா

     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை 

    எழுதியவர் Sindhuja SM
    April 14, 2023 | 05:49 pm 0 நிமிட வாசிப்பு
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை 
    டெல்லி அரசு மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது.

    தேசிய தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 46 லட்சம் பேருக்கு கிடைக்கும் மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால், ஆம் ஆத்மி அரசாங்கம் மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு இடையில் மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, வரும் ஆண்டிற்கான மானியத்தை இன்னும் நீட்டிக்காததால், இன்று முதல் மானியங்கள் நிறுத்தப்படும் என்று மின்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். "46 லட்சம் பேருக்கு நாங்கள் வழங்கும் மானியம் இன்று முதல் நிறுத்தப்படும். திங்கள்கிழமை முதல் மக்களுக்கு மானியம் இல்லாமல் உயர்த்தப்பட்ட பில்கள் கிடைக்கும்" என்று அவர் கூறியுள்ளார். டெல்லி அரசு மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குகிறது. 201 முதல் 400 யூனிட்களை பயன்படுத்துபவர்களுக்கு 50% மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தேவையற்ற அரசியலைத் தவிர்த்துவிடுங்கள்: சக்சேனாவின் அலுவலகம்

    டெல்லி மின்துறை அமைச்சர் அதிஷி செய்தியாளர் சந்திப்பில் இதை கூறி இருக்கிறார். வரும் ஆண்டிற்கான மானியத்தை நீட்டிப்பதற்கு ஆம் ஆத்மி அரசாங்கம் ஒப்புதல் அளித்த போதிலும், மானியதற்கான கோப்பில் சக்சேனா இன்னும் கையெழுத்திடவில்லை என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரமற்றது என்று சக்சேனாவின் அலுவலகம் மறுத்துள்ளது. "தேவையற்ற அரசியலைத் தவிர்த்துவிடுங்கள். ஏப்ரல் 15 ஆம் தேதி கடைசித் தேதியாக இருக்கும் நிலையில், ஏப்ரல் 4 ஆம் தேதி வரை ஏன் இந்த முடிவை நிலுவையில் வைத்திருந்தீர்கள். ஏன் கோப்பை அனுப்பிவிட ஏப்ரல் 11ஆம் தேதி வரை ஆனது." என்று சக்சேனாவின் அலுவலகம் கூறியுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டெல்லி
    ஆம் ஆத்மி

    இந்தியா

    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி சோனியா காந்தி
    இனி 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யலாம் - வெளியான புதிய அம்சம்!  ட்விட்டர்
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி  அசாம்
    சீனாவுக்கு பதிலடி: இந்திய-சீன எல்லையில் சுற்றுலா தலங்களை அமைக்க இந்தியா முடிவு  சீனா

    டெல்லி

    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் பண்டிகை
    டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்  இந்தியா
    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!  ஆப்பிள் நிறுவனம்
    பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல் இந்தியா

    ஆம் ஆத்மி

    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் இந்தியா
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது டெல்லி
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு டெல்லி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023