NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி
    தேசிய தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹரியானா இனக்கலவரம்: உஷார் நிலையில் டெல்லி

    எழுதியவர் Sindhuja SM
    Aug 02, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஆகஸ்ட்-1) ஹரியானாவின் நூஹ் மற்றும் குருகிராமில் நடந்த இனக்கலவரங்களை தொடர்ந்து, ஹரியானா காவல்துறை 116 பேரைக் கைது செய்து, 41 FIRகளைப் பதிவு செய்துள்ளது.

    திங்கள்கிழமை ஹரியானாவின் நூஹ்வில் தொடங்கிய வகுப்புவாத மோதல்களால் இதுவரை இரண்டு ஊர்க்காவல் படையினர், மூன்று பொதுமக்கள் மற்றும் ஒரு இமாம் உட்பட குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில், குருகிராமில் நேற்று இரவு நடந்த புதிய இனக்கலவர வன்முறை சம்பவங்களால் டெல்லி உஷார்படுத்தப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, குருகிராமில் இருக்கும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மோதல்களை தடுக்க பெட்ரோல் மற்றும் டீசலை 'லூசில்' விற்பனை செய்யக்கூடாது என்று குருகிராமில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    போயி

    டெல்லிக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு 

    விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், தேசிய தலைநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நூஹ் மோதல்களுக்கு எதிராக டெல்லியில் உள்ள நிர்மான் விஹார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

    நேற்று முன்தினம் ஹரியானாவின் நூஹ்கில் இனக்கலவரகள் தொடங்கிய நிலையில், நேற்று ஒரு கும்பல் குருகிராமில் உள்ள பாட்ஷாபூரில் ஒரு உணவகத்திற்கு தீ வைத்து, பக்கத்து கடைகளை சேதப்படுத்தியது.

    இதனை தொடர்ந்து, டெல்லி போலீஸார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். டெல்லியில் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேவையான இடங்களில் கூடுதல் போலீஸ் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹரியானா
    டெல்லி
    கலவரம்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    ஹரியானா

    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் திருவண்ணாமலை
    OYO நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார் இந்தியா
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    டெல்லி

    எலெக்ட்ரிக் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்க டெல்லி அரசின் புதிய திட்டம் எலக்ட்ரிக் வாகனங்கள்
    நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது இந்தியா
    பிரதமர் மோடி பங்கேற்கும் டெல்லி பல்கலைக்கழக விழா: கருப்பு சட்டை அணிய தடை பிரதமர் மோடி
    டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி மெட்ரோ

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025