NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தற்கொலை செய்து கொண்ட தலித் IIT மாணவர் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா
    அடுத்த செய்திக் கட்டுரை
    தற்கொலை செய்து கொண்ட தலித் IIT மாணவர் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா
    தலித் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று மாணவர் குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட தலித் IIT மாணவர் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 15, 2023
    04:50 pm

    செய்தி முன்னோட்டம்

    IIT பாம்பேயில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் 18 வயது தலித் மாணவர், தனது சாதியின் காரணமாக தனது நண்பர்களால் ஒதுக்கப்பட்டதைப் பற்றி அவரது சகோதரி மற்றும் அத்தையிடம் பேசியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    IIT பாம்பேயின் அதிகாரிகள் அப்படி எந்த பாரபட்சம் பார்க்கப்படவில்லை என்று கூறியுள்ள நிலையில், தர்ஷன் சோலங்கியின் குடும்பத்தினர் அவர் நண்பர்களால் துன்புறுத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.

    "கடந்த மாதம் அவன் வீட்டுக்கு வந்தபோது, ​​கல்லூரியில் சாதிப் பாகுபாடு பார்க்கப்படுவதாக என்னிடமும், அம்மா-அப்பாவிடமும் கூறினான். அவன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்பதை தெரிந்துகொண்ட நண்பர்கள், அவனுடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திவிட்டனர்." என்று அவரது சகோதரி ஜான்வி சோலங்கி கூறியுள்ளார்

    இந்தியா

    தலித் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமா?

    "அவன் கஷ்டத்தில் இருந்திருக்கிறான். அவனை சித்திரவதை செய்திருக்கிறார்கள். அதனால்தான் அவன் இந்த முடிவை எடுத்திருக்கிறான்." என்று அவரது தாயார் தர்லிகாபென் சோலங்கி கூறி இருக்கிறார்.

    இதற்கிடையில், இது நிறுவன கொலையுமல்ல இங்கு சாதியால் யாரும் துன்புறுத்தபடவும் இல்லை என்று IIT பாம்பே தெரிவித்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை விடுதி கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து குதித்து இறந்த தர்ஷனின் மரணத்தை விபத்து என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தற்கொலை கடிதம் என்று எதுவும் கிடைக்காத நிலையில், தலித் மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று மாணவர் குழு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    இந்தியா

    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள் ஜியோ
    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி டெல்லி
    இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரான அம்பேத்கரின் ராஜினாமா கடிதத்தை காணவில்லை அம்பேத்கர்
    கடந்த 5 ஆண்டுகளில் $13 பில்லியன் மதிப்புள்ள ஆயுதங்களை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்கி உள்ளது உலகம்

    மும்பை

    செல்ல நாய்க்கு முன்னுரிமை கொடுத்து நடந்த அம்பானி வீட்டு விசேஷம் வைரல் செய்தி
    ஐஸ்வர்யா ராய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை: அம்பானி வீட்டு விசேஷத்தில் பங்கு பெற்ற பிரபலங்களின் பட்டியல் ஐஸ்வர்யா ராய்
    விஸ்தாரா விமானத்தில் அரை நிர்வாணமாக தகராறு செய்த பயணி கைது இந்தியா
    மும்பையில் பொது இடத்தில் கணவன் மனைவி அடித்துக்கொள்ளும் வீடியோ: Couplegoals என்று வைரல் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025