Page Loader
வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை

வானிலை அறிக்கை: பிப்ரவரி 17- பிப்ரவரி 21

எழுதியவர் Sindhuja SM
Feb 17, 2023
04:51 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் 21ஆம் தேதி வரை வறண்ட வானிலையாகத் தான் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 17 மற்றும் பிப்ரவரி 18ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுசேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். ஒரு சில இடங்களில் தட்பவெப்பநிலை இயல்பை விட 2 அல்லது 3 செல்சியஸ் குறைவாக பதிவாக வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டத்திற்கு வாய்ப்பிருக்கிறது என்றும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 19ஆம் தேதியிலிருந்து 21ஆம் தேதி வரை வானிலை வறட்சியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு