NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் உச்சத்தை தொட்ட தினசரி மின்தேவை - 17,647 மெகாவாட்டாக அதிகரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் உச்சத்தை தொட்ட தினசரி மின்தேவை - 17,647 மெகாவாட்டாக அதிகரிப்பு
    தமிழகத்தில் உச்சத்தை தொட்ட தினசரி மின்தேவை - 17,647 மெகாவாட்டாக அதிகரிப்பு

    தமிழகத்தில் உச்சத்தை தொட்ட தினசரி மின்தேவை - 17,647 மெகாவாட்டாக அதிகரிப்பு

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 2.67 கோடியாக உள்ளது. அதன்படி மின்தேவையானது சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வந்தது.

    இதில் விவசாய தேவைக்கு 2,500 மெகாவாட் என்னும் அளவு இருந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெப்பமும் அதிகரிக்க துவங்கிவிட்டது.

    வீடுகளில் ஏசி, மின்விசிறி, போன்ற பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், மின்தேவையானது 16 ஆயிரம் மெகாவாட்'டிற்கு மேல் உள்ளது.

    இதற்கிடையே விவசாய பிரிவில் தற்போது கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 1.50 லட்சம் மின் இணைப்புகள் காரணமாக அந்த பிரிவின் கீழ் மட்டும் 727 மெகாவாட் மின்தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் எப்போதும் இல்லாத அளவாக நேற்று முன்தினம் தினசரி மின்தேவை 17,647 மெகாவாட்டாக அதிகரித்து பெரும் உச்சத்தை தொட்டுள்ளது.

    மின்வாரிய அதிகாரிகள்

    அனல்மின் நிலையங்களில் முழுஅளவில் உற்பத்தி

    இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மத்திய தொகுப்பில் இருந்து 5,800 மெகாவாட், சூரியசக்தி, அனல் மின் நிலையங்களில் தலா 3,800மெகாவாட் மின்சாரம் உள்ளிட்டவை கொண்டு இந்த மின்தேவையானது பூர்த்திசெய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

    கோடை காலத்தின் துவக்கத்திலேயே 17 ஆயிரம் மெகாவாட் மின்தேவை உள்ளநிலையில், வரும் நாட்களில் இது 18 ஆயிரம் முதல் 19 ஆயிரம் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    எனவே, இதனை ஈடுசெய்ய மின்வாரியம் தனது அனல்மின் நிலையங்களில் முழுஅளவில் உற்பத்தியினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதை தவிர தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    கடந்த 2022ம்ஆண்டு ஏப்ரல்29ம்தேதி 17,563 மெகாவாட் மின்சார பயன்பாடு என்பதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் 1,000 மருத்துவ முகாம்கள்: மா.சுப்பிரமணியன் இந்தியா
    வானிலை அறிக்கை: மார்ச் 7- மார்ச் 11 வானிலை அறிக்கை
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழிச்சிட்டீங்க: அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025