NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு
    மிக்ஜாம் புயல் - தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு

    புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு

    எழுதியவர் Nivetha P
    Dec 08, 2023
    07:19 pm

    செய்தி முன்னோட்டம்

    மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தினை ஏற்படுத்தியுள்ளது.

    மழை ஓய்ந்த நிலையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

    தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இப்புயலின் பாதிப்பானது தமிழக வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரிடர்களில் ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வெள்ளநீர் வடிய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த மிக்ஜாம் புயலால் சென்னை தலைமை செயலக பணியாளர்கள் பலர் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    நிவாரண நிதி 

    மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்கான நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது 

    எனினும், வழக்கம் போல் இயற்கை பேரிடர் காலங்களில் இதுபோன்ற இக்கட்டான சூழலில் நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

    அதன்படி மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளுக்கான நிவாரண நிதிக்கு தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு செய்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த பேரிடர் காலத்திலும் தலைமை செயலக பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை நிவாரண நிதிக்கு வழங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

    இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத சம்பளத்தினை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வெள்ளம்
    மீட்பு பணி
    கொரோனா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை  கனமழை
    சென்னை பெருங்களத்தூர் சாலையில் கடந்து சென்ற முதலை - வைரல் வீடியோ வனத்துறை
    மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல் விமான நிலையம்
    மிக்ஜாம் புயலால் சென்னையில் 47 ஆண்டுகள் இல்லாத அளவு மழைப்பொழிவு புயல் எச்சரிக்கை

    வெள்ளம்

    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்  டெல்லி

    மீட்பு பணி

    சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க பயன்படுத்தவுள்ள எலி துளை சுரங்கம் என்றால் என்ன? உத்தரகாண்ட்
    இறுதி கட்டத்தில் சுரங்கப்பாதை மீட்பு பணி: 41 தொழிலாளர்களை அழைத்து வர சுரங்கத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்கள்  உத்தரகாண்ட்
    உத்தர்காசி சுரங்கப்பாதை விபத்து: 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு உத்தரகாண்ட்
    தமிழகத்தில் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் 500 மீட்புப்படையினர், 1100 தீயணைப்பு வீரர்கள் வானிலை ஆய்வு மையம்

    கொரோனா

    இந்தியாவில் வரலாறு காணாத அளவு குறைந்தது கொரோனா பாதிப்புகள் இந்தியா
    ஒரே நாளில் 2 பேர் உயிரிழப்பு: இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    புதிதாக எட்டு வைரஸ்களைக் கண்டறிந்த சீன ஆராய்ச்சியாளர்கள் வைரஸ்
    மீண்டும் உயரும் கொரோனா பாதிப்புகள்: இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025