Loading...
ஒரே ஆண்டில் 3 தேசிய விருதுகள் - சாதித்த சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி ஆகாங்ஷா சிங்
தேசிய விருது பெற்ற விஞ்ஞானி முனைவர் ஆகாங்ஷா சிங்

ஒரே ஆண்டில் 3 தேசிய விருதுகள் - சாதித்த சிஎஸ்ஐஆர் விஞ்ஞானி ஆகாங்ஷா சிங்

எழுதியவர் Vasuki
Aug 09, 2026
05:02 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR-CIMAP) மூத்த விஞ்ஞானியான முனைவர் ஆகாங்ஷா சிங், ஒரே ஆண்டில் நாட்டின் மூன்று உயரிய தேசிய விருதுகளைப் பெற்று அரிய ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். மத்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மத்திய மூலிகை மற்றும் நறுமணப் தாவரங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-CIMAP) விஞ்ஞானியாக (Scientist-D) முனைவர் ஆகாங்ஷா சிங் பணியாற்றி வருகிறார்.

நாசி இளம் விஞ்ஞானி விருது

இன்சா இளம் இணை உறுப்பினர்

வேளாண்மை மற்றும் தாவர அறிவியல் துறையில் அவரது சிறந்த பங்களிப்பைப் பாராட்டி, இந்தியாவின் பழமையான தேசிய அறிவியல் அகாடமி வழங்கும் இளம் விஞ்ஞானி விருது 2026 இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு இந்திய தேசிய இளம் அறிவியல் அகாடமியின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் தொடர்ந்து இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் இளம் இணை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1930-இல் நிறுவப்பட்ட தேசிய அறிவியல் அகாடமியின் இளம் விஞ்ஞானி விருது 2026-க்குத் தேர்வாகியுள்ளார்.

ஒரே ஆண்டில் இந்த மூன்று தேசிய அளவிலான உயரிய அங்கீகாரங்களையும் பெற்ற மிகச் சில இளம் இந்திய விஞ்ஞானிகளுள் ஒருவராகவும், தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற ஆகாங்ஷா சிங், பயிர் பாதுகாப்பு மற்றும் உற்பத்திப் பிரிவில் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்.

இயற்கைப் பயிர் பாதுகாப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் மூலம் பயிர்களைத் தாக்கும் பூஞ்சை காளான் நோய்களை இயற்கை வழியில் கட்டுப்படுத்துவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

பாதிப்பில்லாத வகையிலும், விவசாயிகள் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் வகையிலும் நிலையான வேளாண்மைக்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறார்.

2026-ஆம் ஆண்டிற்கான நாசி இளம் விஞ்ஞானி விருதுக்கு இந்தியா முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்ட 16 விஞ்ஞானிகளில் முனைவர் ஆகாங்ஷா சிங்கும் ஒருவர் ஆவார்.

டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்து பல்கலைக்கழகத்தில் நாசியின் 96-வது ஆண்டு மாநாட்டில் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் விவசாயிகளுக்குப் பயனுள்ள அறிவியல் ஆராய்ச்சிகள், இந்தியாவின் இயற்கை வேளாண்மைத் துறைக்குப் புதிய பாதையை வகுத்துக் கொடுத்துள்ளன.

ADVERTISEMENT