NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது
    பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது

    பெங்களூரில் திருடிய தக்காளிகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்த தம்பதி கைது

    எழுதியவர் Nivetha P
    Jul 23, 2023
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    பெங்களூர் ஆர்.எம்.சி.யார்டு காவல்துறைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து, சித்ரதுர்கா மாவட்டத்தினை சேர்ந்த விவசாயி போரலிங்கப்பா தனது நிலத்தில் விளைந்த 250கிலோ எடைகொண்ட தக்காளிகளை கோலார் சந்தைக்கு விற்பனை செய்ய லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

    அப்போது வழியை மறித்த மர்ம கும்பல் போராலிங்கப்பா மற்றும் அந்த லாரியின் ஓட்டுநரை மிரட்டி கூகுள் பே மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தினை பரிமாற்றம் செய்துகொண்டதுடன் நிற்காமல், தக்காளி லாரியையும் கடத்தி சென்றுள்ளனர்.

    இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டதில் அந்த லாரி தமிழ்நாடு நோக்கி சென்றுள்ளது என்று சிசிடிவி பதிவுகள் மூலம் காவல்துறை கண்டறிந்துள்ளது.

    திருட்டு 

    கடத்தலில் ஈடுபட்ட தம்பதி தமிழக காவல்துறை உதவியுடன் கைது

    இதனிடையே, லாரியினை கடத்தி சென்ற அந்த மர்ம கும்பல் திருப்பத்தூர் ஆம்பூரில் அனைத்து தக்காளிகளையும் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளனர்.

    பின்னர் மீண்டும் பெங்களூர் திரும்பிய அவர்கள், எல்லை பகுதியிலேயே தாங்கள் சென்ற வாகனத்தினை நிறுத்திவிட்டு, நம்பர் பிளேட் இல்லாத வேறொரு வாகனத்தில் சென்றுள்ளனர்.

    இந்நிலையில் இந்த தக்காளி கடத்தி விற்ற கும்பலின் தலைவர்களாக செயல்பட்ட சிந்துஜா மற்றும் பாஸ்கர் தம்பதியினரை பெங்களூர் போலீசார், தமிழக காவல்துறை உதவியுடன் கைது செய்துள்ளனர்.

    மேலும் இவர்களுடன் இணைந்து செயல்பட்ட மற்ற 3 நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    தக்காளி திருடி விற்பனை செய்த இந்த வழக்கில் 5 நபர்கள் மீதும் ஐபிசி 346ஏ, 392 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    தமிழக காவல்துறை
    கூகுள் பே

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பெங்களூர்

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் இளைஞர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் திருவண்ணாமலை
    கர்நாடகாவில் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ChatGPT பிளஸ் சந்தாவை பரிசாக வழங்கும் நிறுவனம்! காரணம் என்ன? சாட்ஜிபிடி
    ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு கர்நாடகா

    தமிழக காவல்துறை

    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு சென்னை

    கூகுள் பே

    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல இ-ஆட்டோ சேவை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025