NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - காவல்துறையினர் விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - காவல்துறையினர் விசாரணை
    சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - காவல்துறையினர் விசாரணை

    சென்னை கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் - காவல்துறையினர் விசாரணை

    எழுதியவர் Nivetha P
    Aug 21, 2023
    05:35 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை வேளச்சேரியில் செயல்பட்டு வரும் குருநானக் கல்லூரி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் இன்று(ஆகஸ்ட்.,21) காலை மோதல் ஏற்பட்டுள்ளது.

    இருதரப்பு மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட இந்த மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கிண்டி காவல்துறைக்கு கல்லூரி நிர்வாகம் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

    அங்கு சென்ற அவர்கள் மோதலில் ஈடுபட்டிருந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் கல்லூரி வளாகத்தில் வெடிக்காமல் இருந்த 2 வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் கண்டெடுத்துள்ளனர்.

    வெடிகுண்டு 

    கானா பாடல் பாடிய பொழுது ஏற்பட்ட மோதல் 

    கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டுகளை பரிசோதனை செய்து பார்த்ததில், அவை நாட்டு வெடிகுண்டு இல்லை என்பதும், சவ ஊர்வலத்தின் போது வெடிக்கப்படும் பட்டாசுகள் என்பதும் தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட மாணவர்களை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

    அதில், வெவ்வேறு பாடப்பிரிவில் 3ம் ஆண்டு படிக்கும் இருதரப்பு மாணவர்கள் இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் இருந்து வந்தது என்றும் தெரியவந்துள்ளது.

    அதன்படி, இன்று காலை கேன்டீனில் இருதரப்பினரும் கானா பாடல் பாடிய பொழுது இந்த மோதல் ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் மாணவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கல்லூரி மாணவர்கள்
    சென்னை

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    கல்லூரி மாணவர்கள்

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    பாலியல் புகாரால் சர்ச்சைக்குள்ளான சென்னை கலாஷேத்ரா கல்லூரி இன்று மீண்டும் திறப்பு சென்னை
    தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பிற்காக 66 லட்சம் பேர் காத்திருப்பு  தமிழ்நாடு
    சென்னை கல்லூரி மாணவர்களுக்கு மாதாந்திர பாஸ் அறிமுகம் - சென்னை மெட்ரோ  சென்னை

    சென்னை

    எனக்கு அதிகளவில் வேலையும் இல்லை, அதிகாரமும் இல்லை - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட பெண் வியாபாரி - 5 பேர் கைது  கொலை
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  பருவமழை
    செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த டி.ராஜா: சென்னையில் பரபரப்பு கம்யூனிஸ்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025