NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை
    தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பிதழ்

    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை

    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023
    06:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 2023ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

    இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் வரும் 12ம் தேதி பொங்கல் பெருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த விழாவிற்கு வருகை தருமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    வரும் வியாழக்கிழமை(ஜனவரி 12ம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் பெருவிழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு இந்த அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த அழைப்பிதழ் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கவில்லை

    தமிழக இலட்சினைக்கு பதிலாக மத்திய அரசு இலட்சினை - மீண்டும் சர்ச்சை

    மேற்கூறியவாறு, அந்த அழைப்பிதழலில் 'தமிழ்நாடு ஆளுநர்' என்று குறிப்பிடாமல் 'தமிழக ஆளுநர்' என்று அச்சிடப்பட்டிருந்தது.

    மேலும் அதில் தமிழ்நாடு இலட்சினை இல்லாமல், மத்திய அரசின் இலட்சினை அச்சடிக்கப்பட்டுள்ளது.

    இதனால் மீண்டும் ஓர் சர்ச்சையினை ஆர்.என்.ரவி கிளப்பியுள்ளார்.

    முன்னதாக, நேற்று நடந்த சட்டப்பேரவையில் நிகழ்வுகள் தொடர்பாகவும், தமிழ்நாடு அரசு, திராவிட மாடல், அரசின் பாராட்டுக்கள் என அனைத்தும் ஆளுநர் கையில் அச்சிடப்பட்டு கொடுக்கப்படும்,

    அதனைத்தான் ஆளுநர் உரையில் அவர் பேச வேண்டும். ஆனால் நேற்று அதிலுள்ளவற்றை படிக்காமல் வேறு சிலவற்றை அவர் பேசினார்.

    இதனையடுத்து ஆளுநர் உரையில் உள்ளவை தான் அவை குறிப்பாக இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் ஒன்றினை கொண்டுவந்தார்.

    அதற்கும் ஆளுநர் அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொங்கல் திருநாள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்

    பொங்கல் திருநாள்

    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! இந்திய ரயில்வே
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம் பொங்கல் பரிசு
    சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை துவக்கம் - சில நிமிடங்களில் விற்றுப்போன பயணச்சீட்டுக்கள் ரயில்கள்
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு

    தமிழ்நாடு

    இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர் விரைவு சாலை
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு போராட்டம்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    தொழில்முனைவில் முன்னணியில் இருக்கும் தமிழக பெண்கள்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025