NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை
    இந்தியா

    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை

    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை
    எழுதியவர் Nivetha P
    Jan 10, 2023, 06:43 pm 1 நிமிட வாசிப்பு
    பொங்கல் பெருவிழா அழைப்பிதழில் 'தமிழக ஆளுநர்' என அச்சிடப்பட்டுள்ளது: மீண்டும் சர்ச்சை
    தமிழக ஆளுநர் என குறிப்பிடப்பட்டுள்ள அழைப்பிதழ்

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை 2023ம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் வரும் 12ம் தேதி பொங்கல் பெருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு வருகை தருமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி, பிரபலங்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் வியாழக்கிழமை(ஜனவரி 12ம் தேதி) மாலை 5.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த பொங்கல் பெருவிழாவிற்கு அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு இந்த அழைப்பிதழ் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அழைப்பிதழ் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழக இலட்சினைக்கு பதிலாக மத்திய அரசு இலட்சினை - மீண்டும் சர்ச்சை

    மேற்கூறியவாறு, அந்த அழைப்பிதழலில் 'தமிழ்நாடு ஆளுநர்' என்று குறிப்பிடாமல் 'தமிழக ஆளுநர்' என்று அச்சிடப்பட்டிருந்தது. மேலும் அதில் தமிழ்நாடு இலட்சினை இல்லாமல், மத்திய அரசின் இலட்சினை அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஓர் சர்ச்சையினை ஆர்.என்.ரவி கிளப்பியுள்ளார். முன்னதாக, நேற்று நடந்த சட்டப்பேரவையில் நிகழ்வுகள் தொடர்பாகவும், தமிழ்நாடு அரசு, திராவிட மாடல், அரசின் பாராட்டுக்கள் என அனைத்தும் ஆளுநர் கையில் அச்சிடப்பட்டு கொடுக்கப்படும், அதனைத்தான் ஆளுநர் உரையில் அவர் பேச வேண்டும். ஆனால் நேற்று அதிலுள்ளவற்றை படிக்காமல் வேறு சிலவற்றை அவர் பேசினார். இதனையடுத்து ஆளுநர் உரையில் உள்ளவை தான் அவை குறிப்பாக இருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானம் ஒன்றினை கொண்டுவந்தார். அதற்கும் ஆளுநர் அதிகாரபூர்வமாக விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    பொங்கல் திருநாள்

    சமீபத்திய

    ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென் பாலிவுட்
    தமிழகத்தின் 10ம் வகுப்பு செய்முறை தேர்வில் 25 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை பள்ளி மாணவர்கள்
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா

    தமிழ்நாடு

    இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்: 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' பொம்மனும், குட்டி யானை ரகுவும் வைரலான ட்வீட்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை

    பொங்கல் திருநாள்

    மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரருக்கு புதிய கார் பரிசாக வழங்கப்பட்டது மதுரை
    திருக்குறள் மீதுள்ள ஆர்வம் - புதுவித கூகுள் டூடூலை வடிவமைத்த வாலிபர் கூகுள்
    களைகட்டும் காணும் பொங்கல் - சென்னையில் 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் சென்னை
    காணும் பொங்கல்: சுற்றுலா தளங்களில் குவியும் பொதுமக்கள் பொங்கல்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023