NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை கொண்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை கொண்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு
    காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு

    சாதிவாரி கணக்கெடுப்பு, வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை கொண்ட காங்கிரஸின் தேர்தல் அறிக்கை வெளியீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 05, 2024
    12:39 pm

    செய்தி முன்னோட்டம்

    லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஐந்து நீதித் தூண்களை மையமாக வைத்து காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

    அதில், வேலை வாய்ப்புகள், சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது.

    காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 'பாஞ்ச் நியாய்' அல்லது ஐந்து நீதித் தூண்கள்: 'யுவ நியாய்','நாரி நியாய்','கிசான் நியாய்','ஷ்ரமிக் நியாய்' மற்றும் 'ஹிஸ்ஸேதாரி நியாய்' ஆகியவை ஆகும்.

    கட்சியின் தேர்தல் அறிக்கையின்படி, சாதிகள், துணை ஜாதிகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்காக நாடு தழுவிய சமூக-பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் நடத்தும். பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றும் என்று கட்சி உத்தரவாதம் அளிக்கிறது.

    தேர்தல் அறிக்கை

    வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி

    பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு, அனைத்து சாதிகள் மற்றும் சமூகங்களுக்கு பாகுபாடின்றி செயல்படுத்தப்படும்.

    பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் உள்ள அனைத்து பின்னடைவு காலியிடங்களையும் ஒரு வருட காலத்திற்குள் கட்சி நிரப்பும்.

    அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வழக்கமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை காங்கிரஸ் ரத்து செய்து, அத்தகைய நியமனங்களை முறைப்படுத்துவதை உறுதி செய்யும்.

    பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கான நிதி, குறிப்பாக உயர்கல்விக்காக இரட்டிப்பாக்கப்படும்.

    ஏழைகள், குறிப்பாக பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான குடியிருப்புப் பள்ளிகளின் வலையமைப்பை காங்கிரஸ் நிறுவி, ஒவ்வொரு தொகுதிக்கும் விரிவுபடுத்தும்.

    embed

    காங்கிரஸின் தேர்தல் அறிக்கை

    The Congress party shall be unveiling its Manifesto today. Our 5 NYAY — 25 GUARANTEE agenda represents our non-negotiable commitment to the welfare of Nation. Since 1926 till date, the Congress Manifesto is a solemn document of the inseparable trust between us and the People... pic.twitter.com/mb2WtQjiJ0— Mallikarjun Kharge (@kharge) April 5, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    தேர்தல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காங்கிரஸ்

    மம்தா பானர்ஜி-ஐ தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு அடித்த ஆம் ஆத்மி ஆம் ஆத்மி
    'அனைவரையும் ஒன்றிணைக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்': பீகார் அரசியல் நெருக்கடி குறித்து பேசிய மல்லிகார்ஜுன் கார்கே பீகார்
    திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது திமுக
    சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி  சண்டிகர்

    தேர்தல்

    மார்ச் 15ம் தேதிக்குள் இரண்டு புதிய தேர்தல் கமிஷனர்களை மத்திய அரசு நியமிக்க வாய்ப்பு  தேர்தல் ஆணையம்
    தேர்தல் கூட்டணியில் நிலைமாறுகிறதா தேமுதிக? பாஜக கூட்டணியுடன் பேச்சுவார்த்தை தொடங்க முடிவு தேமுதிக
    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்பிஐயின் கோரிக்கையை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்  டெல்லி
    தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025