NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி
    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி
    இந்தியா

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி

    எழுதியவர் Nivetha P
    April 08, 2023 | 06:53 pm 0 நிமிட வாசிப்பு
    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி
    எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி

    அதிமுக பொது செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்சஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் ரூ.4 ஆயிரத்து 80 கோடி செலவில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கல்லூரி கட்டிடங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்படவில்லை. மேலும் இந்த கட்டிடங்களை கட்டியதில் பெரும் ஊழல் நடந்துள்ளது என்று புகார்கள் எழுந்தது. இதன்படி அப்போது பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்துவந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆகியோர் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை

    இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால் அவரிடம் இந்த லஞ்ச புகார் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த கோரிக்கையினை ஏற்ற தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. தொடர்ந்து தற்போது இது குறித்த விசாரணையினை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இது குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை துவங்கும் என்று கூறப்படுகிறது. சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்த பின்னர் அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    எடப்பாடி கே பழனிசாமி
    தமிழக அரசு
    அதிமுக

    எடப்பாடி கே பழனிசாமி

    சென்னையில் ஏப்ரல் 7ம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து அதிமுக
    அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு அதிமுக
    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுக
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    தமிழக அரசு

    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய ஜாதி சான்றிதழ் என பரவும் போலி தகவல் தமிழ்நாடு
    ஆவின் தயிர் பாக்கெட்டில் 'தஹி' என குறிப்பிட கூறிய உத்தரவை வாபஸ் பெற்ற ஒன்றிய அரசு மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் எடப்பாடி கே பழனிசாமி

    அதிமுக

    கர்நாடக சட்டசபை தேர்தல் - ஓபிஎஸ் அணியினர் எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு ஓ.பன்னீர் செல்வம்
    ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்? ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023