NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.

    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ.

    எழுதியவர் Nivetha P
    Apr 21, 2023
    02:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை, உக்கடத்தில் கோட்டையீஸ்வரன் கோயில் வாசலில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23ம்தேதி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

    இதில் ஜமேஷாமுபின் என்பவர் பலியானார், இதுதொடர்பாக ஜமேஷா முபின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தனர்.

    அப்போது வெடிப்பொருட்கள், சிலிண்டர் பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் இந்த வழக்கின் தீவிரத்தன்மை காரணமாக தேசியப்புலனாய்வு முகமை(NIA) விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இதனையடுத்து ஜமேஷா முபினுடன் தொடர்புடைய முகமது தல்கா, முகமதுஅசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 11பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைதுச்செய்தனர்.

    இதனுள் 6 பேர்மீது என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதன்படி இந்த வழக்கில் கைதான முகமதுஅசாருதீன் என்பவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பென்ட்ரைவில் ஜமேஷாமுபின் பேசிய வீடியோப்பதிவு இருந்துள்ளது.

    குண்டு

    5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு 

    அந்த வீடியோவில், தான் ஒரு தெளலத்-இ-இஸ்லாமியா என்னும் அமைப்பின் உறுப்பினர் என்றும்,

    இஸ்லாமை எதிர்ப்பவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்போவதாகவும், தனது உயிரிழப்பது பற்றியும் தெரிவித்துள்ளார்.

    மேலும் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ஷாரன் ஹாசிமின் பேச்சுக்களால் தான் ஈர்க்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

    மேலும் இலங்கையில் நடந்தது போல், இந்தியாவிலும் ஒரு தாக்குதலை நடத்த முபின் திட்டமிட்டதும் அதில் கூறப்பட்டுள்ளதாக தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து என்.ஐ.ஏ.அதிகாரிகள் மீதுமுள்ள 5 பேர் மீதும் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.

    கைதான 5 பேரினை காவலில் எடுத்து விசாரிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    காவல்துறை
    காவல்துறை
    என்ஐஏ

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கோவை

    சிவபெருமானின் ஏழு மலையாக கருதப்படும் வெள்ளியங்கிரி மலையின் சிறப்புகள் தமிழ்நாடு
    நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.10 லட்சத்தொகை-விருது தொகையை தானம் செய்த 'சிறுதுளி' அறங்காவலர் தமிழ்நாடு
    கின்னஸ் சாதனைக்கு முயற்சி-15 மொழிகளை கற்றுத்தேர்ந்த இளம்பெண் கிருபாஷிணி தமிழ்நாடு
    பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: இபிஎஸுக்கு எதிராக வழக்கு தமிழ்நாடு

    காவல்துறை

    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி போலியானது - காவல்துறை விளக்கம் தமிழ்நாடு
    வடமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை - அமைச்சர் கணேசன் தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு
    வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது மகாபலிபுரம்

    காவல்துறை

    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு கடலூர்
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை தமிழ்நாடு
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025