Loading...
தென்மண்டல முதல்வர்கள் கூட்டம்: காவிரி, நீட் விலக்கு குறித்து முதல்வர் விஜய் எழுப்பிய முக்கியக் கோரிக்கைகள் 
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ளார்

தென்மண்டல முதல்வர்கள் கூட்டம்: காவிரி, நீட் விலக்கு குறித்து முதல்வர் விஜய் எழுப்பிய முக்கியக் கோரிக்கைகள் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2026
02:56 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற 31-வது தென்மண்டலக் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கியக் கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ளார். இக்கூட்டத்தில் தென்னக மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகள் முழுமையாக மதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய முதலமைச்சர் விஜய், கீழ்நிலை நீர்ப்பிடிப்பு மாநிலங்களின் சட்டப்பூர்வ உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். மேலும், நீதித்துறை உத்தரவுகளின்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தத் தேவையான சட்டப் பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விலக்கு

நீட் தேர்வு விலக்கு மற்றும் கல்வி உரிமை

மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பிளஸ் டூ (+2) பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே தமிழகத்தின் முதன்மை நிலைப்பாடு என்பதைத் தெளிவுபடுத்தினார்.

தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை உத்தரவாதம் மற்றும் நிதிப் பகிர்வு

நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறையால் எந்தவொரு தென்மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாது என்பதற்கு மத்திய அரசு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் தென் மாநிலங்கள் 30 சதவீதம் பங்களிப்பு வழங்குவதால், அவற்றின் செயல்திறனைக் கருத்தில் கொண்டு நியாயமான நிதிப் பகிர்வை வழங்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி வரம்புகளை தீர்மானிக்கும் நெகிழ்வுத் தன்மையை மாநிலங்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

உள்கட்டமைப்பு

கடல்சார் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு

1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடல்சார் வழிகளைப் பயன்படுத்தித் துறைமுகம், சரக்கு போக்குவரத்து, மீன்வளம் மற்றும் கடல் சுற்றுலாவை மேம்படுத்த அண்டை மாநிலங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், கர்நாடகாவின் பொம்மச்சந்திரா முதல் தமிழகத்தின் ஓசூர் வரை மெட்ரோ ரயில் பாதையை நீட்டிக்கும் திட்டம் இரு மாநிலங்களுக்கும் இடையிலான சிறந்த உள்கட்டமைப்பாக அமையும் எனத் தெரிவித்தார்.

போதைப் பொருளை ஒழிப்பதில் அனைத்து மாநிலங்களுடனும் ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை எனவும் வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT