NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட்
    பெண்களால் நடத்தப்படும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்

    தென்காசி மாவட்டத்தில் பெண்களால் நடத்தப்பட்ட 'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' கிறிஸ்துமஸ் மார்க்கெட்

    எழுதியவர் Nivetha P
    Dec 26, 2022
    11:30 pm

    செய்தி முன்னோட்டம்

    கிறித்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், பெண்களுக்காக பெண்களே ஏற்பாடு செய்த கிறித்துமஸ் மார்க்கெட்டில் சுய தொழில் செய்யும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    'வாவ் வொண்டர் ஆஃப் வுமன்' என்னும் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இந்த மார்க்கெட் கடையநல்லூரில் உள்ள இட்டாலியன் ரெஸ்டாரண்டில் வைத்து நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் சுயமாக தொழில் செய்யும் பெண்களான கேக் தயாரிப்பவர்கள், இயற்கை மூலிகைகளை கொண்டு சூப் பவுடர் செய்பவர்கள், ஆரி ஒர்க் செய்யும் பெண்கள், இயற்கை முறையில் சோப் தயாரிப்பவர்கள், அழகிய பேனா நோட்டுக்கள் ஆகியவற்றை சமூக வலைத்தளம் மூலம் விற்பவர்கள், குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு பொருட்களை சுயமாக தயாரித்து விற்பனை செய்வோர் என பலர் கலந்துக்கொண்டனர்.

    டிசம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெறும்

    சுயத்தொழில் செய்யும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்க நடத்தப்படும் மார்க்கெட்

    இதில் கலந்துகொண்டு வியாபாரம் செய்த பெண்கள் இது குறித்து பேசுகையில், "பெண்களால் எல்லாம் செய்ய முடியும் என்ற நோக்கில், பெண்களாகிய நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடைகளை நடத்துவது எங்களது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது.

    இதன் மூலம். வீட்டிற்குள்ளேயே தொழில் செய்யும் எங்களை போன்ற பெண்கள், ஆண்களை போல் பெரியளவில் வியாபாரம் செய்ய உதவியாக அமைகிறது" என்று தெரிவித்துள்ளனர்.

    மேலும் இது குறித்து, 'வாவ்' அமைப்பினர் சார்பில் கூறுகையில், "வீட்டிலேயே தொழில் செய்து வரும் பெண்களை ஊக்குவிக்கவும், அவர்களது திறமைகளை வெளியில் கொண்டு வரும் நோக்கத்துடன் தான் இந்த மார்க்கெட் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது" என்று கூறப்பட்டது.

    இந்த கிறித்துமஸ் மார்க்கெட் டிசமபர் 24 மற்றும் 25 தேதிகளில் மட்டுமே நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025