NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் 
    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்

    தலைமை செயலாளர் தலைமையில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 05, 2023
    05:43 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் குறித்து பல துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று(ஜூலை.,5)தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

    இந்த ஜி20 கூட்டமானது சர்வதேசப்பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றமாக பார்க்கப்படுகிறது.

    சர்வதேச பொருளாதார முக்கிய பிரச்சனைகள், நிர்வாகம் வடிவமைப்பு மற்றும் உலகளாவிய கட்டமைப்பு ஆகியவற்றுள் ஜி20 மாநாடு முக்கியப்பங்கு வகிக்கிறது.

    இந்நிலையில், இம்முறை இந்தியாவின் தலைமையில் 2022ம்ஆண்டு டிசம்பர் 1 முதல் 2023ம்ஆண்டு நவம்பர் 30வரை நடைபெறவுள்ளது.

    இதில் பேரிடர் அபாயத்தினை குறைக்க புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டக்குழுவின் 3 கூட்டங்கள் ஆண்டு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டநிலையில் அதில் 2 கூட்டங்கள் காந்திநகர் மற்றும் மும்பையில் நடந்து முடிந்துள்ளது.

    கூட்டம் 

    பல்வேறு துறை சார்ந்தோர் பங்கேற்பு 

    இதனைத்தொடர்ந்து, தற்போது இதன் 3வது கூட்டம் சென்னையில் வரும் 24ம்தேதி முதல் 26ம்தேதி வரை நடக்கவுள்ளது.

    இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இதில் பேசிய தலைமை செயலாளர், "தமிழகத்தில் பேரிடர் அபாயக்குறைப்பு குறித்து உறுப்பு நாடுகளின் கூட்டத்தினை சிறப்பான முறையில் நடத்தப்படவேண்டும். அதற்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகள் அனைத்தையும் அதன் தொடர்புள்ள துறைகள் மேக்கொள்ளவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இக்கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினரான செயலர் கமல் கிஷோர், ஜி20 மாநாட்டின் இயக்குனர் மிர்னாலினி, வருவாய் நிர்வாக ஆணையர், அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் மணிவாசன், மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் என பல துறை சார்ந்த முக்கிய நபர்கள் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு புதுச்சேரி
    மூலதன முதலீட்டு நிதியில் தமிழகத்திற்கு ரூ.4,079 கோடி ஒதுக்கீடு - மத்திய அரசு  மத்திய அரசு
    பொத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறை மறுப்பு  பள்ளிக்கல்வித்துறை
    மாத வருமானமாக ரூ.10,000 சம்பாதிக்கும் சிறை கைதிகள்  தமிழக அரசு

    சென்னை

    சென்னை கிண்டி மருத்துவமனை: இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்கிறார் கருணாநிதி
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் தமிழ்நாடு
    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழகம்
    ஸ்குவாஷ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி உலக கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025