தடா எல்லையை நெருங்கிய மேகக்கூட்டங்கள்! சென்னையில் இன்று மழை பெய்யுமா?
செய்தி முன்னோட்டம்
இன்று காலை முதல் சென்னையில் அடர்ந்த மழை மேகங்கள் சூழ்ந்துள்ளன. இறுக்கமான சூழ்நிலை நிலவி வரும் நேரத்தில் Tamilnadu Weatherman தனது X பக்கத்தில் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதன்படி, திருப்பதி அருகே மையம் கொண்டுள்ள இந்த மேகக்கூட்டங்கள் தடா எல்லையை நெருங்கியுள்ளது சென்னைவாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். திருப்பதியில் உருவான இந்த இடியுடன் கூடிய மழை மேகங்கள், எதிர்பார்த்ததை விட நீண்ட நேரம் தனது வலிமையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. பொதுவாக காலை நேரத்து ஈரப்பதம் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இவை மெதுவாகத் தெற்கு நோக்கி நகர்ந்து வருகின்றன என அவர் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
The early morning storms over Tirupathi has survived and nearing Tamil Nadu border near Tada. Can it reach Chennai ?
— Tamil Nadu Weatherman (@praddy06) April 6, 2026
=================
Storm cluster near Tirupati has held together longer than expected
Now approaching Tada. Movement: slow + slightly southward drift… pic.twitter.com/zxDYADG7rU