NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி
    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி
    இந்தியா

    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி

    எழுதியவர் Nivetha P
    May 30, 2023 | 11:27 am 1 நிமிட வாசிப்பு
    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி
    சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்திய நோயாளி

    சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பாலாஜி என்பவர் கல்லீரல் நோய் பாதிப்பால் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,இங்கு பயிற்சி மருத்துவராக பணிபுரியும் சூர்யா என்பவரிடம் பாலாஜி தனது கையில் போட்டிருந்த ஐ.வி.ஊசியினை அகற்றுமாறு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மருத்துவப்பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கத்திரிக்கோலினை எடுத்து கழுத்தில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சூர்யா அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகிறார். இந்த சம்பவத்தினையடுத்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, பாலாஜி கைது செய்யப்பட்டதாகவும், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கூறியதால் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

    Twitter Post

    சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் கழுத்தில் குத்திய நோயாளி - ஸ்டிரைக்கில் இறங்கிய சக டாக்டர்கள்#rajivgandhihospital #chennai #doctorhttps://t.co/J1oJPLCNTb

    — Thanthi TV (@ThanthiTV) May 30, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    அரசு மருத்துவமனை

    சென்னை

    இரவு நேர வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஆடை கட்டாயம் காவல்துறை
    சென்னையில் போக்குவரத்து போலீசாருக்கு குடிநீர், குளிர்பானம் வழங்கும் முகாம்  தமிழ்நாடு
    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் மு.க ஸ்டாலின்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு

    அரசு மருத்துவமனை

    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்  தமிழ்நாடு
    மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்!  இந்தியா
    சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி சென்னை
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023