NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்

    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்

    எழுதியவர் Nivetha P
    Mar 04, 2023
    04:15 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

    அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தவிர்க்கவே இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு வருகிறது.

    இரவு நேரங்களிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதன்படி, இன்று(மார்ச்.,4) அதிகாலை 1.30 மணியளவில் நினைவு சின்னம் அருகே சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.

    அப்போது அந்த வழியாக பெண் ஒருவருடன் வழக்கறிஞர் பிரசன்னா வெங்கடேஷ்(27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

    அவரை நிறுத்திய போலீசார் ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர், பின் பக்கம் ஒரு பெண் அமர்ந்திருக்கும் பொழுது நீங்கள் எப்படி என்னை நிறுத்தலாம் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

    வழக்குப்பதிவு

    சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கறிஞர் கைது

    மேலும் அங்கிருந்த போலீசாரை ஒருமையில் பேசியதுமில்லாமல், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரிடமும் கடும் வாக்குவாதம் செய்துள்ளார்.

    இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் சப் இன்ஸ்பெக்டரின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.

    இதில் காயமடைந்த சப் இன்ஸ்பெக்டரை சக போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள்.

    இதனை தொடர்ந்து அதிகாரியை தாக்கிய வழக்கறிஞரை போலீசார் பிடித்துள்ளனர்.

    அவர் வியாசர்பாடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

    அவர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்
    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு

    சென்னை

    தமிழக முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் திடீர் ஆய்வு செய்தார் தலைமை செயலாளர் இறையன்பு மு.க ஸ்டாலின்
    சித்த மருத்துவர் ஷர்மிகாவிற்கு விளக்கமளிக்க வரும் 24ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு தமிழ்நாடு
    பத்திரிக்கை புகைப்பட கலைஞர்களுக்கு வீட்டுமனை-தமிழக முதல்வர் அறிவிப்பு மு.க ஸ்டாலின்
    சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பு விமானம்

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025