NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்
    இந்தியா

    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்

    எழுதியவர் Nivetha P
    March 04, 2023 | 04:15 pm 0 நிமிட வாசிப்பு
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம்

    சென்னையில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் விதிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள். அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தவிர்க்கவே இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டு வருகிறது. இரவு நேரங்களிலும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி, இன்று(மார்ச்.,4) அதிகாலை 1.30 மணியளவில் நினைவு சின்னம் அருகே சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அப்போது அந்த வழியாக பெண் ஒருவருடன் வழக்கறிஞர் பிரசன்னா வெங்கடேஷ்(27) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை நிறுத்திய போலீசார் ஆவணங்களை கேட்டுள்ளனர். அதற்கு அவர், பின் பக்கம் ஒரு பெண் அமர்ந்திருக்கும் பொழுது நீங்கள் எப்படி என்னை நிறுத்தலாம் என்று வாக்குவாதம் செய்துள்ளார்.

    சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய வழக்கறிஞர் கைது

    மேலும் அங்கிருந்த போலீசாரை ஒருமையில் பேசியதுமில்லாமல், சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரிடமும் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் சப் இன்ஸ்பெக்டரின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். இதில் காயமடைந்த சப் இன்ஸ்பெக்டரை சக போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து அதிகாரியை தாக்கிய வழக்கறிஞரை போலீசார் பிடித்துள்ளனர். அவர் வியாசர்பாடியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல், காயம் ஏற்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சென்னை
    போக்குவரத்து காவல்துறை

    சென்னை

    சென்னையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த நபர் தூக்கிட்டு தற்கொலை தமிழ்நாடு
    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் பாடகர்
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது சமூக வலைத்தளம்

    போக்குவரத்து காவல்துறை

    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023