சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம்
செய்தி முன்னோட்டம்
கடல்மட்ட உயர்வால் சென்னை, கொல்கத்தா போன்ற நகரங்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2100ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு தற்போது உள்ள அளவுக்கு அதிகமாக இருந்தால், ஆசியாவில் முக்கியமான சில நகரங்கள் கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படும் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
அந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் சென்னை மற்றும் கொல்கத்தாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரு நகரங்களை தவிர, யாங்கூன், பேங்காக், ஹோ சி மின், மணிலா போன்ற பெரும் நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன.
இந்தியா
நகரங்களில் ஏற்படும் காலநிலை மாறுபாடுகளால் அபாயம் அதிகரிக்கும்
பருவநிலை மாற்றம் காரணமாக கடல் மட்டத்தில் ஏற்படும் இயற்கையான ஏற்ற இறக்கங்களின் விளைவுகள் குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உலகெங்கிலும் உள்ள கடல்மட்ட ஹாட்ஸ்பாட்களை வரைபடமாக்குவதன் மூலம் இந்த ஆய்வு சாத்தியமாகி இருக்கிறது.
நேச்சர் க்ளைமேட் சேஞ்ச் என்ற இதழில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெப்பநிலையால் கடல் மட்டம் உயரும் என்று விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.
பசுமை இல்ல வாயுக்களால் பூமி அதிகம் வெப்பமடைகிறது. இந்த வெப்பத்தினால் பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் உயர்கிறது.
மேலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர வெள்ள பாதிப்புகளை விட, நகரங்களில் ஏற்படும் காலநிலை மாறுபாடுகளால் 20-30 சதவீதம் வரை இந்த பாதிப்பு அதிகரிக்கலாம் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.