NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்
    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்

    சென்னையில் போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் 7 வாரங்களில் ரூ.6 கோடி அபராதம் வசூல்

    எழுதியவர் Nivetha P
    Mar 14, 2023
    12:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சமீபகாலமாக தொடர்ந்து வாகன தணிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    போக்குவரத்து விதிமீறல்களை கட்டுக்குள் கொண்டுவர கடந்த அக்டோபர் மாதம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதிக தொகை என்பதால் பலரும் அந்த அபராதத்தினை செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர்.

    இதனால் 7.532 குடிபோதை வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவந்துள்ளது.

    எனவே இதுகுறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் மூலம் தகவலளித்து நேரில் வரவழைத்து வழக்குகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி, அழைப்பினை ஏற்று 545பேர் ஆஜராகி அவர்களது நிலுவைத்தொகையினை செலுத்தியுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதன்மூலம் 10 அழைப்பு மையங்களில் 816 வழக்குகள் தீர்வுகாணப்பட்டு அபராத தொகையாக ரூ.84,82,500 செலுத்தப்பட்டுள்ளது.

    347 நீதிமன்ற ஆணை

    அசையும் சொத்துக்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படும்

    கடந்த 6 வாரங்களில் இந்த நடவடிக்கை மூலம் 4,922 வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.5.09 கோடி அபராதத்தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து 7வது வாரத்தில் நிலுவையில் இருந்த 5,738 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.5,93,78,500 அபராத தொகை வசூலாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

    அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதனை செலுத்தாவிடில் அவர்களது வாகனம் மட்டுமின்றி வேறு வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் இருந்தால் அதனுள் ஒன்றினை பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    மேலும், ஏற்கனவே இது போன்று மது போதையில் வாகனம் ஒட்டிவிட்டு அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய 347 நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது,

    அதனை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    போக்குவரத்து காவல்துறை
    போக்குவரத்து விதிகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 7- மார்ச் 11 வானிலை அறிக்கை
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    எனக்கு அப்படியே ஓட்டுப்போட்டு கிழிச்சிட்டீங்க: அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சு திமுக
    ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடி சாதனை படைத்த பெண்கள் இந்தியா

    போக்குவரத்து காவல்துறை

    புதுச்சேரியில் இனி போக்குவரத்து விதிகளை மீறினால் இ-சலான் மூலம் அபராதம் - போக்குவரத்துத்துறை புதுச்சேரி
    சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ. மீது இரும்பு கம்பியால் தாக்குதல் சென்னை
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் சென்னை
    சென்னையில் காவல் அதிகாரியை தாக்கிய வழக்கறிஞர் - பரபரப்பு சம்பவம் சென்னை

    போக்குவரத்து விதிகள்

    சென்ற ஆண்டு, சீட் பெல்ட் அணியாததால், சாலை விபத்துகளில் 16,000க்கும் மேல் உயிரிழந்துள்ளனர் வாகனம்
    ஜனவரி 10 வரை, பாம்பன் பாலத்தின் மேல் ரயில்கள் செல்ல தடை ரயில்கள்
    'தாழ்த்தள பேருந்துகள் இயக்குவது சாத்தியமில்லை' என நீதிமன்றத்தில் போக்குவரத்துத்துறை தகவல் தமிழ்நாடு
    தமிழகத்தில் பேருந்து படியில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் - போக்குவரத்துத்துறை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025