NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 24 மண்டலங்களாக பிரிக்கப்படும் சென்னை மாநகராட்சி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    24 மண்டலங்களாக பிரிக்கப்படும் சென்னை மாநகராட்சி 
    24 மண்டலங்களாக பிரிக்கப்படும் சென்னை மாநகராட்சி

    24 மண்டலங்களாக பிரிக்கப்படும் சென்னை மாநகராட்சி 

    எழுதியவர் Nivetha P
    Aug 09, 2023
    01:38 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை மாநகராட்சி, 155 வார்டுகளை கொண்டு 10 மண்டலங்களாக செயல்பட்டது.

    இதனிடையே கடந்த 2011ம் ஆண்டு சென்னையை நாட்டின் பெருநகர பட்டியலில் சேர்க்க புறநகர் பகுதிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்பின்னர் சென்னை 200 வார்டுகளை கொண்டு 15 மண்டலங்களாக செயல்பட துவங்கியுள்ளது.

    அதன்படி விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சியின் வருவாய் துறை எல்லைகள் சென்னையோடு ஒருங்கிணைக்க முடிவு எடுக்கப்பட்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து குறிப்பிட்ட பகுதிகள் சென்னையோடு இணைக்கப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    சென்னை

    அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள கோப்புகள் 

    அதனை தொடர்ந்து, 23 தொகுதிகள் கொண்ட சென்னையில் 16 சட்டசபைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

    மற்ற 6 சட்டசபை தொகுதிகள் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கிறது.

    எனவே சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்றவாறு மண்டலங்களை அதிகரிக்க வேண்டும் என்று நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானிய கோரிக்கை விவாதத்தின் பொழுது அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

    இந்நிலையில் தற்போது 200 வார்டுகள் கொண்டு 15 மண்டலங்களாக செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி விரைவில் 24 மண்டலங்களாக மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது என கூறப்படுகிறது.

    இதனையடுத்து சட்டசபை தொகுதிகளுக்கு ஏற்றவாறு மண்டலங்களும் அதிகரிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிந்த நிலையில், அதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    கார்கில் நினைவு தினம் - திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்  திருச்சி
    2 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    தக்காளி விலை மீண்டும் உயர்வு; கிலோ ரூ.140 க்கு விற்பனை  தமிழ்நாடு செய்தி
    தமிழில் கையொப்பம் இடுவது கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு  பள்ளிக்கல்வித்துறை

    சென்னை

    நடிகர் விஜய் அரசியலில் இறங்கும் நேரமா? நாளை மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக பரபரப்பு தகவல்  விஜய்
    "அரசியலுக்கு வந்தால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடுவேன்": ரசிகர்மன்ற கூட்டத்தில் அறிவித்த விஜய் நடிகர் விஜய்
    சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதி கட்டிடம் - அடிக்கல் நாட்டினார் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    இனி சனிக்கிழமைகளிலும் சென்னையில் ஆர்.டி.ஓ அலுவலகங்கள் செயல்படும்  தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025