NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டம்
    93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டம்

    93,000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி திட்டம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 28, 2023
    09:24 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 93,000 நாய்களுக்கும், வெறிநாய் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணியை நீக்குவதற்கான மருந்தையும் ஊசி மூலம் செலுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

    இந்த சூழலில், நேற்று, திங்கட்கிழமை, நாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. தெருநாய்கள் கணக்கெடுப்பு மற்றும் நாய்களுக்கான தடுப்பூசி முகாம், சென்னை கார்ப்பரேஷன்(GCC) கமிஷனர் ஜே ராதாகிருஷ்ணனால் நேற்று தொடங்கப்பட்டது.

    சென்னை மாநகரத்தில் உள்ள 16 மண்டலங்களில், சுமார் 120 நாட்களுக்கு இந்த இயக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், விருப்பமுள்ள தன்னார்வலர்களை பயிற்சியில் சேர அழைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரேபிஸ் நோயிலிருந்தும், வெறிநாய்க்கடியில் இருந்தும் சென்னை மக்களை காப்பாற்ற, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    card 2

    அதிகரித்துள்ள தெருநாய்கள் எண்ணிக்கை 

    அக்டோபர் 2018 கணக்கெடுப்பின்படி, சென்னையில் 57,366 நாய்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் நகரத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை தெரியவரும் என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் நாய்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்தாண்டு, சென்னையில் உள்ள தெருநாய்கள் எண்ணிக்கை 93,000 ஐத் தாண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த தடுப்பூசி செலுத்த ஒரு குழுவாக தன்னார்வலர்கள் செயல்படுவார்கள் எனவும், அந்த குழுவில், ஒரு கால்நடை மருத்துவர், நான்கு நாய் பிடிப்பவர்கள், இரண்டு உதவியாளர்கள் மற்றும் ஒரு வாகனம் அடங்கிய ஏழு பிரத்யேக குழுக்களை GCC நியமித்துள்ளது.

    இக்குழு, ஒவ்வொரு நாளும் சுமார் 910 தெரு நாய்களைப் பிடித்து தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சென்னை

    சென்னையில் காற்று மாசு - தரக்குறியீடு 100ஐ தாண்டியதாக தகவல் காற்று மாசுபாடு
    தீபாவளி கொண்டாட்டத்தால் சென்னையில் அதிகரித்த காற்று மாசு- தரக்குறியீடு 200-ஐ கடந்தது தீபாவளி
    நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம்  விமான சேவைகள்
    கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா மருத்துவமனையில் அனுமதி கம்யூனிஸ்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025