NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை செம்பரப்பாக்கம் ஏரி - வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1500 கனஅடியாக உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை செம்பரப்பாக்கம் ஏரி - வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1500 கனஅடியாக உயர்வு 
    சென்னை செம்பரப்பாக்கம் ஏரி - வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1500 கனஅடியாக உயர்வு

    சென்னை செம்பரப்பாக்கம் ஏரி - வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு 1500 கனஅடியாக உயர்வு 

    எழுதியவர் Nivetha P
    Nov 29, 2023
    06:04 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.

    இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

    அதன்படி சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.

    இதற்கிடையே 24 அடி உயரம் கொண்ட சென்னை செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்க துவங்கியுள்ளது.

    இந்நிலையில் நேற்று(நவ.,28)இதன் நீர்மட்டம் 22.29 அடி வரை இருந்த நிலையில் 200 கன அடி உபரி நீர் 19 கண் மதகுகளில் திறந்துவிடப்பட்டது.

    இன்று(நவ.,29)காலை நிலவரப்படி, தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 22.35 அடியை எட்டியது.

    நீர் 

    கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல் 

    இதன் காரணமாக அணையில் இருந்து வெளியற்றப்படும் உபரி நீரின் அளவு 200 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி, செம்பரப்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வினாடிக்கு 1,100 கன அடியாக உள்ளது.

    இதன் காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 1,000 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, திருநீர்மலை, அடையாறு, திருமுடிவாக்கம், குன்றத்தூர், சிறுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    உபரி நீரை வெளியேற்றும் வீடியோ பதிவு 

    #WATCH | செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 1500 கன அடியாக அதிகரிப்பு!

    ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தாலும் சமாளிப்பதற்காக முன்கூட்டியே உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது!#SunNews | #ChembarambakkamLake | #ChennaiRains pic.twitter.com/iP5W54ElKV

    — Sun News (@sunnewstamil) November 29, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மழை
    பருவமழை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    அரசு மரியாதையுடன் சங்கரய்யா இறுதி சடங்கு நாளை நடைபெறும் மு.க ஸ்டாலின்
    காசிமேடு கடற்கரையினை ரூ.8.65கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணி - முதல்வர் அடிக்கல் நாட்டினார்  தமிழ்நாடு
    இன்று முதல் சென்னை தீவுத்திடல் பகுதியில் போக்குவரத்து மாற்றம் போக்குவரத்து விதிகள்
    தமிழக காங்கிரஸ் தலைவராக விரும்பும் கார்த்தி சிதம்பரம்  காங்கிரஸ்

    மழை

    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் டெல்லி
    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை  தெலுங்கானா
    சென்னை நகரில் இரவு பெய்த கனமழை; விமான சேவைகள் பாதிப்பு  சென்னை
    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வானிலை ஆய்வு மையம்

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  டெல்லி
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  தமிழ்நாடு
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025