NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி 
    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி

    சென்னையில் மாநகர பேருந்துகள் திடீர் போராட்டத்தால் பொதுமக்கள் அவதி 

    எழுதியவர் Nivetha P
    May 29, 2023
    07:17 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு அரசு போக்குவரத்தினை தனியார் மயமாக்குதலினை கண்டித்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

    ஒப்பந்த அடிப்படையில் போக்குவரத்து துறை 400 ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்து, சென்னை, கும்பகோணம், திருச்சி போன்ற 12 மாவட்டங்களின் பணிமனைகளில் பல்வேறு வழித்தடத்தில் ஒப்பந்த ஓட்டுநர்கள் பணியமர்த்த திட்டமிடப்பட்டிருந்தது.

    அதன்படி சென்னையில் மட்டுமே பல்லவன் சாலை, கோயம்பேடு போன்ற ஒவ்வொரு பணிமனையிலும் நாள் ஒன்றுக்கு 40 ஒப்பந்த ஓட்டுநர்கள் நியமிக்கப்பட இருந்தனர்.

    இந்நிலையில், அரசு அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் ஒப்பந்தத்தை கோரலாம் என்று போக்குவரத்துத்துறை அறிவித்த நிலையில் போராட்டம் துவங்கியுள்ளது.

    போராட்டம் 

    பேருந்துகளை இயக்க நடவடிக்கை - தொமுச நடராஜன்

    அரசு போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்குதலை கண்டித்து திடீரென போக்குவரத்துத்துறை ஊழியர்கள் பேருந்துகளை பணிமனைக்கு எடுத்து செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னையிலுள்ள 32 பணிமனைகளில் பேருந்துகள் ஒவ்வொன்றாக நிறுத்தப்பட்டு வருவதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    தமிழ்நாடு போக்குவரத்துத்துறை தனியார் ஏஜென்சி மூலம் ஆட்களை சேர்ப்பதினை முழுவதுமாக கைவிட வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    தொமுச உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், பொதுமக்கள் நலனுக்காக போராட்டத்தினை கைவிட ஊழியர்களிடம் தொமுச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    பேருந்துகளை இயக்க ஊழியர்களிடம் பேசிவருவதாக தொமுச நடராஜன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    போராட்டம்

    சமீபத்திய

    Alkaline நீர் உண்மையில் உடலுக்கு நல்லதா? இதோ அறிவியல் உண்மை உடல் ஆரோக்கியம்
    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

    தமிழ்நாடு

    அரசு பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகளை பெற வேண்டாம் என சுற்றறிக்கை  ரிசர்வ் வங்கி
    தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து உறுதி செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்  பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் தொடர் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    ரூ.2000 நோட்டுக்களை அரசு பேருந்துகளில் பயணிகள் மாற்றலாம் - தமிழக போக்குவரத்துத்துறை இந்தியா

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு விமான சேவைகள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு சென்னை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025