Loading...
சென்னையில் ஆட்டோ, டாக்ஸிக்கு டிஜிட்டல் மீட்டர் செயலி: அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவிப்பு
சென்னையில் ஆட்டோ, டாக்ஸிக்கு டிஜிட்டல் மீட்டர் செயலி

சென்னையில் ஆட்டோ, டாக்ஸிக்கு டிஜிட்டல் மீட்டர் செயலி: அமைச்சர் ராஜ்குமார் சட்டப்பேரவையில் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2026
05:19 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், பயணிகளுக்கு நியாயமான பயணக்கட்டணத்தை உறுதி செய்யவும் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று வீட்டு வசதித் துறை அமைச்சர் ப.ராஜ்குமார் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து அதிகார அமைப்பால் (CUMTA) உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த செயலி மூலம் பயணிகள் நியாயமான முறையில் பயணிக்க முடியும். இதன் மூலம் கூடுதல் கட்டணப் புகார்களுக்குத் தீர்வு காண்பதுடன், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு இடையே ஒரு வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் நம்பிக்கையான போக்குவரத்து சேவை சூழல் உருவாகும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT