NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்
    இந்தியா

    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்

    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்
    எழுதியவர் Nivetha P
    Dec 29, 2022, 11:15 pm 0 நிமிட வாசிப்பு
    பொங்கல் பரிசுத்தொகுப்பு குறித்து மீண்டும் ஆலோசனை நடத்திய முதல்வர்-டோக்கன் விநியோகிக்கும் தேதியில் மாற்றம்
    2023ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு

    வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, தமிழக அரசு சார்பில் வழக்கம் போல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரூ,1000 ரொக்கமாக வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த பரிசுத்தொகுப்பு வழங்குவதை சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2ம் தேதி துவக்கி வைப்பதாகவும் அதே நாளில், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அமைச்சர்கள் துவங்கி வைப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பினை சேர்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

    ஜனவரி 3முதல் 8ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும்

    கரும்பு விவசாயிகளும் இது குறித்து கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், தங்களிடம் கரும்புகளை கொள்முதல் செய்து பரிசுத்தொகுப்பில் இணைத்து விநியோகம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர். இதனையடுத்து மீண்டும் தலைமை செயலத்தில் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தினார். அதன்படி, பரிசுத்தொகுப்பில் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என்று முதல்வர் முடிவு செய்து உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, இதற்கான டோக்கன் இம்மாத கடைசியிலும், ஜனவரி 2,3,4 தேதிகளில் வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது டோக்கன் விநியோகம் ஜனவரி 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜனவரி 9ம் தேதி பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்வை துவக்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    ஸ்டாலின்
    மு.க ஸ்டாலின்
    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : முந்தைய சீசன்களில் பெற்ற படுதோல்வியிலிருந்து மீளுமா மும்பை இந்தியன்ஸ்? ஐபிஎல் 2023
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவின் நிகத் ஜரீன், நிது கங்காஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் உலக கோப்பை
    "ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி? ஐபிஎல் 2023

    ஸ்டாலின்

    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் கேரளா
    ஆஸ்கார் விருது வென்ற , 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்பட இயக்குனரை நேரில் அழைத்து கௌரவித்த முதல்வர் ஸ்டாலின் ஆஸ்கார் விருது
    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு
    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா தமிழ்நாடு

    மு.க ஸ்டாலின்

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் தமிழ்நாடு
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது தமிழ்நாடு
    உலக தண்ணீர் தினம் : வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கினார் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளம்

    தமிழ்நாடு

    தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்பு ஆஸ்திரேலியா
    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு இந்தியா

    மு.க.ஸ்டாலின்

    ஆளுநர்களுக்கு வாய் மட்டுமே உள்ளது காதுகள் இல்லை - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு
    தமிழக முதல்வரை திடீரென சந்தித்தார் பா.ம.க. நிறுவனர் அன்புமணி ராமதாஸ் பாமக
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு
    ஈரோடு இடைத்தேர்தல் - வரும் 24ம் தேதி பிரச்சாரத்தில் களமிறங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023