NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி 
    சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட இடம் இனி, 'சிவசக்தி புள்ளி' என்று அழைக்கப்பட உள்ளது.

    இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் உரையாட பெங்களூர் வந்தார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 26, 2023
    09:39 am

    செய்தி முன்னோட்டம்

    சந்திரயான்-3 திட்டத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, அந்த திட்டத்தை வெற்றிகரமாக முடித்த இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்துவதற்காக இன்று(ஆகஸ்ட் 26) பெங்களூரு வந்தார் பிரதமர் மோடி.

    சந்திரயான்-3 திட்டத்தில் பணிபுரிந்து வரும் விஞ்ஞானிகள் குழுவுடன் இன்று அவர் உரையாடும் போது உணர்ச்சிவசப்பட்டார்.

    பெங்களுருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் கட்டளை மையத்தில் பேசிய பிரதமர் மோடி, "தற்போது நிலவில் இந்தியா உள்ளது. நமது நாட்டின் பெருமை நிலவில் வைக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

    "சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு மிகப்பெரும் தருணமாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

    40 நாள் பயணத்திற்குப் பிறகு, சந்திரயான் -3இன் லேண்டரான 'விக்ரம்', கடந்த புதன்கிழமை மாலை, சந்திரனின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறங்கியது.

    டொய்ஜ்வ்

    பிரதமர் மோடியின் மூன்று முக்கிய அறிவிப்பு 

    இதனையடுத்து, அறியப்படாத நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

    மேலும், நிலவில் உள்ள இரண்டு இடங்களுக்கு பிரதமர்-மோடி இன்று பெயரிட்டார்.

    சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்ட இடம் இனி, 'சிவசக்தி புள்ளி' என்று அழைக்கப்பட உள்ளது.

    கூடுதலாக, 2019இல் சந்திரயான்-2 நிலவில் விபத்துக்குள்ளான புள்ளிக்கு 'திரங்கா புள்ளி'(மூவர்ண புள்ளி) என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இது தவிர, மேலும் ஒரு முக்கிய அறிவிப்பையும் பிரதமர்-மோடி இன்று அறிவித்தார்.

    சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய தேதி, அதாவது ஆகஸ்ட்-23, இனி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டாடும் நாளாக இது இருக்கும். மேலும் இது இளம் தலைமுறைகளையும் ஊக்குவிக்கும்" என்று பிரதமர்-மோடி கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    பிரதமர் மோடி
    இஸ்ரோ
    சந்திரயான் 3

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பெங்களூர்

    மதிப்பெண் குறைவாக இருந்தாலும் வேலை கிடைக்கும், ஆனால் இது கிடைக்காது - வைரல் டிவீட் வைரலான ட்வீட்
    ஆன்லைன் தளத்தில் வீடு தேடிய நபரிடம் மோசடி.. ரூ.1.6 லட்சம் பறிப்பு! ஆன்லைன் மோசடி
    கர்நாடகாவில் புதிய தொழிற்சாலை அமைக்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்? கர்நாடகா
    FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு! சாலை பாதுகாப்பு விதிகள்

    பிரதமர் மோடி

    மணிப்பூர் விவகாரம் - கருப்பு சட்டை அணிந்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்  மணிப்பூர்
    பாஜக மீண்டும் 2024ல் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடே இருக்காது - மு.க.ஸ்டாலின் பேச்சு  மு.க ஸ்டாலின்
    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை  மழை
    கிருஷ்ணகிரி வெடி விபத்து - ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அதிகாரிகள் தமிழ்நாடு

    இஸ்ரோ

    பறக்கும் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சந்திராயன்-3ன் வைரல் வீடியோ  இந்தியா
    'சந்திரயான் 3' தயாரிப்பு பணியில் முக்கிய பங்கு வகித்த நிறுவனத்தின் சோக நிலை  இந்தியா
    புவியின் 4ம் சுற்றுவட்ட பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்த சந்திரயான்-3 விண்கலம்  சந்திரயான் 3
    ககன்யான் திட்ட வீரர்களை மீட்கும் ஒத்திகையின் இரண்டாம் நிலையை தொடங்கியிருக்கும் இஸ்ரோ சந்திரயான்

    சந்திரயான் 3

    நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கவிருக்கும் சந்திரயான் 3 சந்திரன்
    நிலவை நோக்கிய பாதையில் சந்திரயான்-3யை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ இஸ்ரோ
    இன்னும் சிறிது நேரத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைகிறது சந்திரயான்-3 இஸ்ரோ
    சந்திரயான்-3: சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை குறைக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது இஸ்ரோ இஸ்ரோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025