NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சண்டிகர் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சண்டிகர் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல் 

    சண்டிகர் தேர்தல் அதிகாரி மீது வழக்கு தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 19, 2024
    05:21 pm

    செய்தி முன்னோட்டம்

    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடி நடந்த விவகாரத்தை கண்டித்து, தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ் மீது வழக்குத் தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக தேர்தல் நடத்தும் அதிகாரியை தலைமை நீதிபதி குறுக்கு விசாரணை செய்வது இதுவே முதன்முறையாகும்.

    சமீபத்தில் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் மனோஜ்குமார் சோங்கர் வெற்றி பெற்றார்.

    எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரின் 8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் தோற்கடிக்கப்பட்டார்.

    8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தை ஆம் ஆத்மி அணுகியது.

    சண்டிகர்

    வாக்குச் சீட்டுகளை நீதிமன்றத்திற்கு கொண்டுவர உத்தரவு 

    ஓய்வுபெற்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் மனு தாக்கல் செய்தார்.

    ஆனால், அவருக்கு இடைக்கால நிவாரணம் வழங்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன்பிறகு, அவர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

    இன்று இந்த பிரச்சனையை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாக்குச் சீட்டுகளை பரிசீலனைக்காக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திற்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளது.

    புதிதாக தேர்தலை நடத்துவதற்கு பதிலாக, வேறொரு தேர்தல் அதிகாரியின் மூலம் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று முதலில் முன்மொழிந்த நீதிமன்றம், வாக்குச்சீட்டுகளை ஆய்வு செய்த பிறகு இந்த பிரச்சினை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சண்டிகர்
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சண்டிகர்

    சண்டிகர் மேயர் தேர்தலில் 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான முதல் தேர்தல் போரில் பாஜக வெற்றி  பாஜக
    "ஜனநாயகத்தின் கொலை": சண்டிகர் மேயர் தேர்தல் சர்ச்சையை விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    'கேரள ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்?': உச்ச நீதிமன்றம்  கேரளா
    'சட்டத்தை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது' - இந்திய தலைமை நீதிபதி  தமிழக அரசு
    சட்டம் பேசுவோம்: மரண தண்டனைக்கு எதிராக வலுக்கும் குரல்கள்  சட்டம் பேசுவோம்
    மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி மத்திய பிரதேசம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025