NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பயணிகள் கவனத்திற்கு, அக்டோபர் 8 வரை பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பயணிகள் கவனத்திற்கு, அக்டோபர் 8 வரை பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்
    பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்

    பயணிகள் கவனத்திற்கு, அக்டோபர் 8 வரை பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்களில் மாற்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 18, 2024
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    நாளை முதல் அக்டோபர் 8 வரை பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்படுகிறது.

    இது குறித்து இன்று தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதன்படி,"மதுரை -திண்டுக்கல் ரயில் நிலையங்களுக்கு இடையே நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற அக்டோபர் மாதம் 8-ந்தேதி வரை என்ஜினீயரிங் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது".

    "ஈரோடு -செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் -16845) ரயில் இன்று (புதன்கிழமை) முதல் அக்டோபர் மாதம் 7-ந்தேதி வரை திண்டுக்கல் -செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது".

    "மறுமார்க்கத்தில் செங்கோட்டை -ஈரோடு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்- 16846) 19-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை செங்கோட்டை -திண்டுக்கல் வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது".

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Fixed Time Corridor blocks have been approved for September, 2024 for facilitating engineering works between Kudalnagar and Samayanallur,
    Madurai and Kudalnagar, Madurai and Dindigul upline from 19th September to 08th October, 2024.#SouthernRailway pic.twitter.com/IFzzD4CUUo

    — Southern Railway (@GMSRailway) September 17, 2024

    ரயில் தடங்கள்

    ரயில் தடங்களில் மாற்றம்

    செங்கோட்டை -மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (வண்டி எண் -16848) நாளை முதல் 7-ந்தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

    கள்ளிகுடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய ஊர்களுக்கு போகாது.

    குருவாயூர் -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16128) வருகிற 23-ந்தேதி, 25, 26, 27-ந்தேதி மற்றும் அக்டோபர் மாதம் 2, 3-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.

    நாகர்கோவில் -மும்பை எக்ஸ்பிரஸ் (16352) வருகிற 26-ந்தேதி மற்றும் அக்டோபர் 3-ந்தேதி ஆகிய இரு நாட்கள் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரயில்கள்

    சமீபத்திய

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்

    ரயில்கள்

     'செல்போனில் கிரிக்கெட்': ஓட்டுநரின் செயலால் தான் ஆந்திராவில் ரயில் விபத்து ஏற்பட்டது என தகவல் ஆந்திரா
    பயண டிப்ஸ்: வாழ்நாள் அனுபவத்தை தரும் 5 ஆடம்பரமான ரயில் பயணங்கள் பயணம்
    சென்னை: பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ மூன்றுக்கும் ஒரே டிக்கெட் திட்டம் சென்னை
    ஜார்கண்ட்: தவறான தீ விபத்து எச்சரிக்கை ஒலியால் ரயிலில் இருந்து குதித்த 3 பேர் பலி ஜார்கண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025